23. சொற்கடிகை: தந்தையும் தனயரும்

சாருஆன்லைன் தளத்தில் வரும் என் எழுத்து எல்லோருக்குமானது.  கட்டணம் இல்லை.  விரும்பினால் நன்கொடையோ சந்தாவோ அனுப்பலாம்.  கட்டாயம் எதுவும் இல்லை.  ஒரு எழுத்து வாசிக்கப்படுவதை விட பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை. 

ஆனால் சக எழுத்தாளர்கள், மாணவர்கள், குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள் யாரும் சந்தா அனுப்ப வேண்டாம்.  அது நியாயம் அல்ல. 

ஆனால், என்னோடு நட்பு கொண்டிருப்பவர்கள் தேருக்கு வடம் பிடித்தே ஆக வேண்டும்.  கையில் காசு இல்லையா?  நேரத்தைக் கொடுங்கள்.  அல்லது, வேறு ஏதாவது.  ஏதோ ஒரு உதவி.  ஒரு நண்பர்.  என்னை தந்தை ஸ்தானத்தில் வைத்திருப்பவர்.  என் மீது பாசம் என்றால் அப்படி ஒரு பாசம்.  ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பைசா சந்தா என்று அனுப்பினதில்லை.  நேரில் சந்திக்கும் போது சாப்பாடு வாங்கிக் கொடுப்பதெல்லாம் சந்தா கணக்கில் சேராது.

இப்படி எனக்கு மூன்று நான்கு புதல்வர்கள்.  நான்கு புதல்வர்களுமே வசதியானவர்கள்தான்.  ஒவ்வொருவருமே அம்பது அறுபது லட்சத்தில் காரும் சொந்த வீடும் வைத்திருக்கிறார்கள். 

அதில் ஒரு புதல்வர் மார்ச் 19 விழாவுக்கு வர அனுமதி இல்லை என்று மனதில் உறுதி நினைத்தேன்.  வரலாம்.  அவருக்கு மட்டும் கட்டணம் 25000 ரூ.  விழாச் செலவு ஒரு லட்சம் ஆகிறது அல்லவா, அதில் ஒரு கால் பங்கை நீ ஏற்றுக் கொள்.  இல்லையா, தூரத்தில் இருந்து என் எழுத்தைப் படித்து ரசித்து விட்டுப் போய்க் கொண்டே இரு.  ஏன் இந்தத் தந்தை மகன் உறவு?

நாகூரில் ஆறுமுகம் என்று ஒருத்தன்.  அவன் தந்தை கொத்து வேலை பார்த்து பையனைப் படிக்க வைத்தார்.  தாய் இல்லை.  படித்தான்.  முஸ்லிமாக மாறினான். இதுவரை சரி.  ஆனால் தந்தையைப் பிச்சை எடுக்க விட்டு விட்டான்.  தினசரி கையில் ஒரு அலுமினியப் பாத்திரத்தோடு வீடு வீடாகப் பிச்சை எடுப்பார் தந்தை. 

என் புதல்வர்களை நினைக்கும்போது எனக்கு ஆறுமுகம் என்கிற அப்துல்லா அடிக்கடி நினைவுக்கு வருகிறான். 

இன்னொரு புதல்வர், நாலு நாள் முந்தி, அப்பா, உங்கள் முகத்துக்கு என்ன பசை உபயோகிக்கிறீர்கள் என்று கேட்டார்.  பசையின் பெயர் சொன்னேன்.  கூடவே, மூன்று ஆண்டுகளாக சந்தாவே இல்லையே, அனுப்ப முயற்சி செய்யுங்கள் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  முயற்சிக்கிறேன் அப்பா என்று பதில் வந்தது. 

திரும்பவும் சொல்கிறேன்.  நீங்கள் என் எழுத்தைப் படிப்பதுதான் எனக்கு வெகுமதி.  ஆனால் தேருக்கு வடம் பிடிக்காமல் என்னோடு நட்பு பாராட்ட முடியாது.  எனக்கு என்ன புரியாத ஆச்சரியம் என்றால், ஒரு ஹவுஸ்வைஃப் மாதாமாதம் 300 ரூ அனுப்புகிறார்.  ஒரு ஆட்டோக்காரர் மாதம் 300 அனுப்புகிறார்.  என்னை அப்பா என வாய் நிறைய அழைக்கும் புதல்வர்கள் ஏன் ஒரு ரூபாய் கூட அனுப்புவதில்லை?  இதுதான் என் தீராத சந்தேகம்.

இன்னொரு புதல்வர் சூப்பரோ சூப்பர்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கம்.  என் மீது உயிரையே வைத்திருக்கிறார்.  நடிப்பு அல்ல, நிஜம்.  எனக்கு அப்போது பப்பு, ஸோரோவுக்காக மாதம் 20000 ரூ செலவு ஆகிக் கொண்டிருந்தது. புதல்வர் நல்ல வேலை, கை நிறைய சம்பளம், திருமணம் ஆகவில்லை.  ரெண்டு மூணு லட்சம் சம்பளம் என்று நினைக்கிறேன்.  பப்பு, ஸோரோவுக்கு மாட்டுக் கறி கொடுக்காமல் மீன் கொடுங்கள் அப்பா என்றார்.  மீன் கிலோ 700 ரூ.  மாட்டுக் கறி 70 ரூ.  எப்படி என் புதல்வரின் யோஜனை?  உடனே நான் சொன்னேன், மாதம் எனக்கு 5000 ரூ. அனுப்ப முடியுமா?  அனுப்பினால் பெரும் உதவியாக இருக்கும்.

சொன்னபோது அவர் என் எதிரே ஒரு அடி தூரத்தில் இருந்தார்.  காதில் விழாமல் இருக்க வாய்ப்பே இல்லை.  பணம் இன்று வரை வரவில்லை.  ஆனால் இன்னமும் என் மீது உயிரையே வைத்திருக்கிறார். 

வினித்திடம் புதல்வர் பெயரைச் சொல்லி வருகிறாரா என்று கேட்டேன்.  வருவதாக இருந்தார், வேலை வந்து விட்டதாம்.  வர முடியவில்லையே என ரொம்பவும் வருத்தப்பட்டார். 

”என்னது, வருத்தப்பட்டாரா?  அவர் வந்திருந்தால் அவருக்கான கட்டணம் 25000 ரூ.” என்றேன்.

***

சந்தா/நன்கொடை அனுப்ப:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no. 602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai