அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு (குறுநாவல் குறித்த அறிவிப்பு)

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு என்ற தலைப்பிலான என்னுடைய குறுநாவல் புத்தக விழாவின் போது வெளியாகும். வழக்கம் போல் ஸீரோ டிகிரி வெளியீடு. (இந்தக் கடைசி வாக்கியத்தை எழுதியிருக்க மாட்டேன். ஆனால் நண்பர்கள் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் ஆரம்பித்திருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்கவே ஸீரோ டிகிரி வெளியீடு என்று சொன்னேன். என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே எப்போதுமே ஸீரோ டிகிரியிலிருந்துதான் வெளிவரும். அங்கே நிராகரிக்கப்பட்டால் மட்டுமே ஆட்டோநேரட்டிவ். அப்படி நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. கதையை சீனியிடம் விவரித்தேன். அடி வயிறு கலங்குகிறது என்றார். மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையின் பகுதிகள் இணைய தளத்தில் வெளிவராது.