அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு / அருஞ்சொல்

சமஸ் எனக்குப் பிடித்த பத்திரிகையாளர். என்னை ஒரு இருபது பேர் இதுவரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் மிகச் சிறந்த பேட்டி ஆங்கில நாவலாசிரியையும் நாட்டியக் கலைஞருமான Tishani Doshi எடுத்தது. Author’s parole என்ற தலைப்பில் அது வெளியாகி இருக்கிறது. அதே பெயரை கூகிளில் போட்டால் அந்தப் பேட்டியை நீங்கள் படிக்கலாம். அதை விட நல்ல பேட்டியாக இதை உருவாக்கியவர் சமஸ். நான் கொஞ்சம் கண்ணாடி மாதிரி. நீங்கள் உளறினால் நானும் உளறுவேன். நீங்கள் நன்றாகப் பேசினால் நானும் நன்றாகப் பேசுவேன். தமிழில் இதுவரை என்னிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களிலேயே ஆகச் சிறந்தது சமஸ் எடுத்த இந்தப் பேட்டிதான். காரணம், இந்தப் பேட்டி நன்றாக வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உழைத்தார் சமஸ். படித்துப் பாருங்கள்…

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு | அருஞ்சொல் (arunchol.com)