இன்றைய புத்தக விழா

வரும் பத்தாம் தேதி கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். பிறகு பதினான்காம் தேதிதான் திரும்புகிறேன். எனவே ஒன்பதாம் தேதி வரைதான் புத்தக விழாவுக்கு வர முடியும். அதன் பிறகு புத்தக விழா முடியும் வரை வர முடியும். புத்தகங்களில் கையெழுத்து வாங்க வேண்டுமெனில் ஸீரோ டிகிரி அரங்கில் என்னை சந்திக்கலாம். 598 C. அரங்கு எலிப்பொந்து மாதிரி இருக்கும். ஆயிரம் புத்தகங்களைப் பதிப்பித்த பதிப்பகத்துக்கு சிங்கிள் ஸ்டால். புத்தக விழா நிர்வாகிகளை கடவுள் பார்த்துக் கொள்வார். வேறு என்ன செய்வது? அரசாங்கமே தலையிட முடியாத அளவுக்கு தாதாக்களாக இருக்கிறார்கள் விழா நிர்வாகிகள். கதையில்தான் அறம் பாட முடியும். எதார்த்த வாழ்வில் கடவுளிடம்தான் முறையிட முடியும். தமிழக முதல்வருக்கும் எழுதியிருக்கிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மாலை சந்திப்போம்.

தோக்யோ நகர் அருகில் உள்ள Umihataru என்ற தீவில்