இனி இப்படி வேண்டாம்…

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புபவர்களுக்கு நான் எப்போதுமே ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன், பணக்கஷ்டம் உள்ளவர்கள் இதில் சம்பந்தமே வைத்துக் கொள்ளாதீர்கள் என்று. மாணவர்கள், என்னைப் போன்ற தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூவிக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், என் இணைய தளத்தை 80000 பேர் படிக்கிறார்கள். அதில் ஒரு நூறு பேர்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். இந்த நிலையில் 79,900 பேரில் ஒருவராக இருந்து விட்டுப் போவதில் உங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் ஒரு வாசகரிடமிருந்து ஒரு ஓலை. ”எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது, நான் போன மாதம் அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்புங்கள்.”

அன்னார் அனுப்பியது 1000 ரூ. கடிதம் வந்தது வாழை விமர்சனம் வெளிவந்த மறுநாள். உண்மையிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். அல்லது, என்னுடைய வாழை விமர்சனத்தைப் படித்து கோபத்தினால் உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். ஆனால் நெட்ஃப்ளிக்ஸில் அவர் இப்படிச் செய்ய முடியுமா? அல்லது, வேறு எந்த இடத்திலாவது செய்ய முடியுமா? எழுத்தாளன் என்றால் சமூகம் எந்த அளவுக்கு அவனை கேணப்பயலாக நடத்துகிறது என்பதற்கு இது உதாரணம். எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. அமெரிக்காவிலிருந்து ஒருவர் மாதம் ஐயாயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது சங்கராச்சாரியார் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆன்மீகவாதிகள் எந்த அளவுக்கு அப்பழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் ஒரு கடுமையான கட்டுரை எழுதினேன்.

என் குருநாதரை நீங்கள் திட்டி விட்டீர்கள், இனிமேல் பணம் அனுப்ப முடியாது என்று ஐயாயிரம் ரூபாய் அனுப்புவதை நிறுத்தி விட்டார். இன்னொரு நண்பர் பதினைந்தாயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டிருந்தார். மாதாமாதம். இப்படித்தான் இன்னொரு சாமியாரைத் திட்டி எழுதியதும் அந்தப் பணமும் நின்று போனது.

இனிமேல் சந்தா/நன்கொடையாக அனுப்பப்பட்ட பணம் திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது முதல் முறை என்பதால் ஆயிரம் ரூபாயை அந்த அன்பருக்குத் திருப்பி அனுப்பி விட்டேன்.

சினிமா பார்க்கப் போகிறோம். சினிமா நன்றாக இல்லை என்றாலோ, அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போனாலோ தியேட்டர்காரரிடம் சென்று பணத்தைக் கொடு என்று கேட்போமா? எப்பேர்ப்பட்ட கேடு கெட்ட சமூகம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதில் வாழை ரசிகர்கள் வேறு கல்லெறிகிறார்கள். இவருக்கு நன்கொடை வேறு அனுப்ப வேண்டுமாம் என்று. ஏனய்யா, ஏழு கோடியில் படம் எடுத்து விட்டு, பத்தே நாளில் எழுபது கோடி எடுத்திருக்கிறார் அதன் இயக்குனர். அம்பானியால் கூட இப்படி முடியுமா என்று தெரியவில்லை. எழுத்தாளன் நாவல் எழுதினால் அது ஒரு நூறு பிரதி விற்கும். அதில் அவனுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும். அப்படி இருக்கிறது எழுத்தாளனின் பிச்சைக்கார நிலைமை.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்பித் தாருங்கள். விலை மதிக்க முடியாத என் எழுத்துக்கு நீங்கள் கொடுக்கும் தார்மீக மற்றும் லௌகீக ஆதரவு அது.

சந்தா மற்றும் நன்கொடையை ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai.