குப்பை

ரேமண்ட் கார்வர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையேயும் இலக்கிய வாசகர்களிடையேயும் ஒரு சூப்பர் ஸ்டார். நான் இதுவரை அவரைப் படித்ததில்லை. படிக்க விரும்பியதும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால் என்னோடு பிணைக்கப்பட்டால்தான் ஒரு எழுத்தாளனை வாசிக்க ஆரம்பிப்பேன். ஏதாவது ஒரு விதத்தில் அந்தப் பிணைப்பு ஏற்பட வேண்டும். ஒரு இளம் தோழி – என் வாழ்விலே அப்படி ஒரு அழகியை அத்தனை அருகில் நான் கண்டதில்லை – முராகாமியோடு எனக்கு ஒருமுறையாவது படுக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொன்ன போது … Read more

பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி: சுனில் கிருஷ்ணன்

என்னுடைய சிறுகதைத் தொகுதி நேநோவை முன்வைத்து நண்பர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இன்று ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய தினம் எழுத்தாளர்களுக்கு விருது என்பது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம். நான் அதை விமர்சிக்க மாட்டேன். எல்லோரும் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள். ஒரு நல்ல மனிதர் நூறு பேருக்கு விருது வழங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தக் காரியத்தை இன்னும் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றால், விஷ்ணுபுரம் வாசகர் … Read more

உலகக் கால்பந்தாட்டப் போட்டி

எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன்.  எல்லாவற்றையும் பார்ப்பதில்லை.  ஒரு நாளில் ஒரு போட்டி.  இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர்.  காரணம், தென்னமெரிக்கா.  இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து.  செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல்.  யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை.  ஆட்டத்தையே பார்க்கவில்லை.  இரண்டு நாடுகளையுமே பிடிக்காது.  அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா … Read more

கடவுளின் ஜாதகம் (கடவுள் கவிதைகள் 4)

அஞ்சு மாச வயசான கடவுள் ஒரு இசை வெறியர் என்று தெரிந்தது கவனம் பிசகாமல் மணிக்கணக்கில் இசை கேட்கிறார் அதனால் கடவுளை நான் இசைக் கலைஞனாக்குவேன் என்றானொருவன் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சலிப்பே இல்லாமல் கடவுள்தன் கையையும் காலையும் உதைத்துக் கொண்டேயிருக்கிறார் அதனால் கடவுளை நான் நாட்டியக்காரனாக்குவேன் என்றானொருவன் எந்தக் காரணமும் தேவையில்லாமலேயே கடவுளை நான் அய்ப்பீயெஸாக்குவேன் என்றாளொருத்தி கடவுளை நான் தத்துவவாதியாக்குவேன் என்றானொரு தத்துவவாதி எந்தக் குறுக்கீடும் இல்லாமல் புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் … Read more

அம்மாள்!

சென்னையின் கலாச்சார அவலங்களில் ஒன்று, ஹிண்டு ஆங்கில நாளிதழ்.  அதில் உள்ள யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் யாரையும் தெரியாது.  ஒரே விதிவிலக்காக இருந்தவர் அசோகமித்திரன்.  அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, ஆங்கில ஹிண்டு ஆட்களுக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் சுஜாதாவும் பாலகுமாரனும்தான்.  அதன் காரணமாக அந்தப் பத்திரிகை நடத்தும் இலக்கிய விழாவிலும் வெளிமாநில எழுத்தாளர்களைத்தான் பார்க்கலாமே தவிர தமிழ்நாட்டிலிருந்து ஒருவரும் தென்பட மாட்டார்கள்.  ஒப்புக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.  அவர்களும் நாகர்கோவில் பத்திரிகை கோஷ்டியைச் … Read more

நல்ல நேரம்

சமீபத்தில் நம்பர் ஒன் பற்றிய சர்ச்சையில் ஒரு பத்திரிகையாளர் என் பெயரைக் குறிப்பிட்டு ’சாரு இப்போது ஆட்டத்திலேயே இல்லை’ என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியிருந்தார்.  அப்படி நினைக்க அவருக்கு உரிமை உண்டு என்றாலும் வேறொரு காரணத்தினால் அவரை அந்தக் கணமே என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விட்டேன்.  காரணம், அவர் என் எழுத்து எதையும் கடந்த பத்து ஆண்டுகளாகப் படிக்கவில்லை என்று தெரிந்தது.  அதற்கு முன்னாலும் படித்திருப்பாரா என்ற சந்தேகம் இப்போது வருகிறது.  சந்தேகத்துக்குக் காரணம், … Read more