கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்

https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031

கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற நாவல் ஓப்பன் பண்ணா. எழுதியவர் அராத்து.

ஒரு மனிதனின் உளவியல் சிக்கலை இந்த அளவு நுணுக்கமாக அணுகிய ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டதில்லை. அது மட்டும் அல்லாமல் புகழின் வெளிச்சத்துக்கு உள்ளே ஒரு மனிதன் எந்த அளவு அந்தகாரத்தில் வாழ்கிறான் என்பதற்கான ஒரு நேரடி ஆவணம் ஓப்பன் பண்ணா. தமிழில் எனக்கு இப்படி ஒரு நாவல் அனுபவம் கிடைத்தது மிகவும் அரிது.