ஒரு வாரம் முன்பு ஒரு கல்லூரி மாணவி எனக்கு ஒரு லிங்க் அனுப்பி இருந்தார். The Hindu நாளிதழில் வெளியான கட்டுரை அது. படித்து விட்டு என் கண்கள் கலங்கி விட்டன. மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வாழ்வில் அவர்கள் கண்ட அற்புதத் தருணங்களைப் போல் இருந்தது கட்டுரையாளர் விவரித்த விஷயம். நண்பர்களுக்கெல்லாம் அந்த இணைப்பை அனுப்பிக் கொண்டிருந்தேன். அந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு தமிழ் இந்துவில் வந்திருக்குமா, வருமா என்று தினமும் தேடினேன். இன்று வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள்… அந்த நபரின் கொள்கைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அந்த நபரை நீங்கள் வெறுக்கவும் செய்யலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் இன்றைய இந்தியாவுக்குத் தேவை.
Comments are closed.