ஆயுர்வேதம் (2)

சென்ற குறிப்பில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன்.  நூறு ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ என்ன செய்ய வேண்டும் என்பதைப் போல் என்னென்ன செய்யக் கூடாது என்பதும் முக்கியம்.  தெருமுக்குகளில் உள்ள டீக்கடையில் நின்று டீ குடிப்பதை உடனே நிறுத்துங்கள்.  அங்கே உபயோகப்படுத்துவது தேயிலையே அல்ல.  தேநீர் அருந்தத் தோன்றினால் ஒரு கோப்பை வெந்நீர் போதும்.  அதில் Cranberry டீ பாக்கெட்டைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து பாக்கெட்டை எடுத்துப் போட்டு விட்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.  தெருவோரத்து டீக்கடை டீயும் டாஸ்மாக் ஓல்ட்மாங்க்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான்…

Comments are closed.