ஏன் இப்படிக்
கிழிந்த கால்சராய் அணிகிறாய்?’
என்று கேட்கிறாள் ஒருத்தி
நீ பிறந்தாய்
படித்தாய்
வேலை செய்தாய்
காதலித்தாய்
மணந்தாய்
தாயானாய்
மகனைப் பள்ளிக்கு அனுப்பினாய்
வீட்டுக்கு அழைத்து வந்தாய்
மகன் வேலைக்குப் போனான்
காதலித்து மணந்தான்
பேத்தி பிறந்தாள்
கொஞ்சி மகிழ்ந்தாய்
பள்ளிக்கு அனுப்பினாய்
வீட்டுக்கு அழைத்து வந்தாய்
எல்லாம் முடிந்து
உன் நினைவு மறையும்
உங்கள் விதிகள்மீது
மூத்திரம் அடிக்க விரும்புகிறேன்
விரும்புவதெல்லாம் செய்ய இயலாது
அதற்குப் பதிலாக
தொடை தெரியக்
கால்சராய் அணிகிறேன்