என் கவிதைகளை முன்வைத்து…

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “பொது இடங்களில் மூக்கு நோண்டக்கூடாது” என்று தன்னுடைய முதல் நாவலை எழுத முற்பட்டவன் நான்.  பிறகு வந்தது ஸீரோ டிகிரி.  இந்த இரண்டு நாவல்களுக்கும் தமிழில் முன்னோடி என்று எதுவும் இல்லை.  நான் மரபார்ந்த இலக்கியத்தைக் கற்றிருக்கிறேன் என்றாலும் அந்தக் கல்வியை என் மொழியை செதுக்கிக் கொள்ளவே பயன்படுத்திக்கொண்டேன்.  இப்போது கவிதையிலும் அப்படித்தான்.  சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரையிலான கவிதை இலக்கியத்தைக் கற்ற போதிலும் அந்த மரபின் மொழியை மட்டுமே நான் என் … Read more

Blessings…

நாகூரில் ஒரே ஒரு தட்டச்சுப் பயிற்சி நிலையம் உள்ளது.  அதில் இங்க்லீஷ் டைப்பிங் கற்றுக்கொண்டு லோவர் (அப்போது லோவர் என்ற உச்சரிப்பு தெரியாததால் லோயர் என்றே சொல்வோம்) தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்கள் ஒரே ஒருத்தர்தான் இருந்தார்.  அவர் அந்தப் பயிற்சி நிலையத்தை நடத்துபவரின் புதல்வி.  1970களின் முற்பகுதியைச் சொல்கிறேன்.  அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளாக அங்கே வேறு யாருமே லோவர் பரீட்சையில் தேர்வு பெற்றதில்லை.  பத்து பன்னிரண்டு முறை தேர்வுக்குச் சென்று கொண்டேயிருப்பார்கள். நானும் என் … Read more

அச்சத்தின் நிழலில்…

இன்றைய கவிதைநண்பனுக்கு அனுப்பினேன்கவிதை போகவில்லைஃபோனில் அழைத்தேன் ’கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்கவிதையிருந்தால் படி’ என்றான் மனையாள் பக்கத்தில் இருந்தாள்அவளருகில் இருந்துஎன் எழுத்தைக் கடை விரிப்பதுசாலை நடுவேமுஷ்டி மைதுனம் செய்வது போலஆனாலும்இன்றைய கவிதைகாதல் கவிதை அல்ல,தத்துவக் கவிதைஅச்சம் உதறிப் படித்தேன் ’மகிழ்ச்சியின் உச்சத்திலோஎல்லையற்ற துக்கத்திலோஇருந்தால்தான் கவிதைபிறக்கும்’ என்றாள்வாழ்வில் ஒரு புத்தகமும்படிக்திராத என் மனையாள்

Rumors

நானொரு மலர்த்தோட்டம் வைத்திருக்கிறேன்குருதியை நீராக்கிகனவுகளை வித்தாக்கிவளர்த்தேன்ஒவ்வொரு மலரும்என் இதயத்தின் பாடல்ஒவ்வொரு மணமும்என் ஆன்மாவின் மூச்சு தோட்டத்தில் சிலர்அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டுஅவர்களின் கண்கள் வியப்பில் மலர்கின்றனஅவர்களிடம் படிந்த மணம்வான்வரை செல்வதாகச்சொல்கிறார்கள் இந்தத் தோட்டம்வாழ்க்கையின் ரகசியத்தைப் பேசுவதாகபத்திரிகையில் பேசப்பட்டது அது ஒன்றும் ரகசியம் அல்லமலர்களும் மனிதர்களும்ஒரே மண்ணில் பிறந்தவை,துக்கத்திலும் மகிழ்ச்சியிலும்ஒன்றாக நெய்யப்பட்டவை.ஆனால்மலர் ஒரு கணத்தில் வாடுகிறதுமனிதன் தன் துக்கத்தின் கண்ணாடியில்மகிழ்ச்சியின் நிழலைத் தேடுகிறான்

காலைச் சிற்றுண்டி: ஜாக் ப்ரேவர்

ஜாக் ப்ரேவர் (Jacques Prévert, 1900-1977) ஃப்ரெஞ்ச் மொழியின் முக்கியமான கவிஞர். அவரது முதல் கவிதைத் தொகுப்பு Paroles (1946) பெரும் வரவேற்பைப் பெற்றது, அவரது தனித்தன்மை – அவரது மொழி எளிமையாகத் தோன்றும். ஆனால் ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும். பேச்சு வழக்கில் இருக்கும், ஆனால் இசைத்தன்மை கூடியிருக்கும். திரைப்படத்துறையில், Les Enfants du Paradis (1945) போன்ற படைப்புகளுக்காக அவர் புகழ்பெற்றார், இது பிரெஞ்சு சினிமாவின் மாஸ்டர் பீஸாகக் கருதப்படுகிறது. அவருடைய ப்ரேக்ஃபாஸ்ட் என்ற … Read more