கவிதை தெரியாத மட்டி மடையர்களுக்கு ஒரு விளக்கம்

இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை. அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள். அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் … Read more

இலவசம்

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் ராமசாமி. ராமசாமியின் பாட்டனார் செட்டிநாடு பகுதியிலிருந்து பர்மாவுக்குப் பெட்டியடியாகப் போய் பெரும் பணம் சம்பாதித்து வட்டிக்கு விட்டு செல்வந்தரானார். பெட்டியடி என்றால் என்ன என்று புயலிலே ஒரு தோணியில் வரும். எல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம். ராமசாமி இந்தியாவையே பார்த்ததில்லை. ரங்கூனிலேயே இன்னொரு பணக்காரக் குடும்பத்தில் ராமசாமிக்குப் பெண் பார்த்துக் கட்டினார்கள். இரண்டாம் உலக யுத்தம் வந்த போது ராமசாமி தன் பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றிக்கொண்டு தன் மனைவி பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு … Read more