மலர்கள் கொண்டு வந்த செய்தி

அன்பே, நான் மலர்களைப் பறிக்க ஒருபோதும் விரும்பியதில்லைசெடியின் மௌன உயிரைத் தொடுவது பாவமெனத் தோன்றும்ஆனால் இன்று, வாழ்விலே முதல்முறையாய்ஒரு மலர்க்கொத்து என் கைகளில் தவழ்ந்தபோதுஉன் புன்னகையின் நிழல் அதில் மின்னியதுநெஞ்சம் வண்ணத்துப் பூச்சியாய் மாறியதுஅதன் றெக்கைகள் நட்சத்திரங்களின் மொழியில்முணுமுணுத்தனவானம் ஒரு கணம் தன் முகத்தைத் திறந்து சிரித்ததுகாற்று, புல்லாங்குழலின் மென் சுருதியாய் மாறி,காலத்தின் மடிப்புகளில் மெதுவாய் மறைந்ததுஎப்படி இது நிகழ்ந்தது அன்பே?ஒரு மலரின் மொழிஎன் இதயத்தை விண்மீன்களின் பாதையில்பறக்கச் செய்தது அந்தக் கணத்தில் நான் நானாக இல்லைஉலகின் … Read more

இரண்டு குறுங்கவிதைகள்

1.சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைஎங்கோ பாங்கு ஒலிக்கிறது_______________________________________________________________ 2. ’கொலைக்குத் தண்டனை இல்லை’அறிவித்தவுடன்தன்னை அழித்துக்கொண்டான்மனிதன் நதிகள் பாடினகுளங்கள் சிரித்தனமலைகள் மூச்சுவிட்டனகடல்கள் நடனமாடினமண்ணும் மிருகங்களும்இன்பமுற்றன.

கோவா

சென்ற ஆண்டு புருஷன் வெளியீட்டு விழாவுக்காக கோவா சென்ற போது கோவாவை என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நான் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அது பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் பேசினேன் என்று நினைக்கிறேன். உடனடியாகத் திரும்பி விட்டேன். இப்போது ஜூன் இருபதாம் தேதி கோவா செல்கிறேன். எந்த வேலையும் இல்லாமல் ஓய்வெடுக்கச் செல்கிறேன். அதுவும் ஒரு வாரம். இருபத்தாறாம் தேதி மாலை கோவாவிலிருந்து பெங்களூர் செல்கிறேன். அங்கே முப்பதாம் தேதி வரை இருப்பேன். … Read more

நட்சத்திர எண்கணிதம்

மோகினிக்குட்டியின் மென் புன்னகையில்எண்களை நெய்துஅவள் பிறந்தநாளைக் கண்டெடுத்தேன். சொற்களைக் கோத்துஅவள் பாதம் பூஜித்தேன். நிலவொளியில் ஓய்ந்த குளத்தின் அமைதியாய்மௌனித்திருந்தாள்.மௌனத்தின் ரகசியம் கேட்டேன். ‘இதுவரை யாரும் வாழ்த்தியதில்லை’என்றாள் ‘நான் விண்மீனாய் மாறினாலும்,ஒளியின் ரூபமாய்உன் பிறந்தநாளில் வாழ்த்துவேன்’என்றேன்.