அன்பே,
நான் மலர்களைப் பறிக்க ஒருபோதும் விரும்பியதில்லை
செடியின் மௌன உயிரைத் தொடுவது பாவமெனத் தோன்றும்
ஆனால் இன்று, வாழ்விலே முதல்முறையாய்
ஒரு மலர்க்கொத்து என் கைகளில் தவழ்ந்தபோது
உன் புன்னகையின் நிழல் அதில் மின்னியது
நெஞ்சம் வண்ணத்துப் பூச்சியாய் மாறியது
அதன் றெக்கைகள் நட்சத்திரங்களின் மொழியில்
முணுமுணுத்தன
வானம் ஒரு கணம் தன் முகத்தைத் திறந்து சிரித்தது
காற்று, புல்லாங்குழலின் மென் சுருதியாய் மாறி,
காலத்தின் மடிப்புகளில் மெதுவாய் மறைந்தது
எப்படி இது நிகழ்ந்தது அன்பே?
ஒரு மலரின் மொழி
என் இதயத்தை விண்மீன்களின் பாதையில்
பறக்கச் செய்தது
அந்தக் கணத்தில் நான் நானாக இல்லை
உலகின் ஒளியாகவும்
மலரின் மௌனமாகவும்
இருந்தேன்
இப்படிக்கு,
——————