மோகினிக்குட்டியின் மென் புன்னகையில்
எண்களை நெய்து
அவள் பிறந்தநாளைக் கண்டெடுத்தேன்.
சொற்களைக் கோத்து
அவள் பாதம் பூஜித்தேன்.
நிலவொளியில் ஓய்ந்த குளத்தின் அமைதியாய்
மௌனித்திருந்தாள்.
மௌனத்தின் ரகசியம் கேட்டேன்.
‘இதுவரை யாரும் வாழ்த்தியதில்லை’
என்றாள்
‘நான் விண்மீனாய் மாறினாலும்,
ஒளியின் ரூபமாய்
உன் பிறந்தநாளில் வாழ்த்துவேன்’
என்றேன்.