அன்புள்ள ஜெயமோகன்,
எனக்கு எம்.கே.டி., பி.யு. சின்னப்பாவிலிருந்து துவங்கி நடுவில் பி.பி. ஸ்ரீனிவாஸ், மலேஷியா வாசுதேவன், டி.எம்.எஸ்., டி.ஆர். மகாலிங்கம், இளையராஜா மற்றும் இப்போதைய கார்த்திக் வரை எல்லா பாடகர்களையும் பிடிக்கும். எஸ்.பி.பி.யையும்தான். அதே போல் டாகர் பிரதர்ஸ், கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்ஸூர், பண்டிட் ஜஸ்ராஜ், மற்றும் கர்னாடக சங்கீதத்தில் உள்ள அத்தனை பேரும் என்று சுமார் ஐநூறு கலைஞர்களைப் பிடிக்கும். பிஸ்மில்லா கான் என் கடவுள்.
இதே போல் மேற்கத்திய சங்கீதத்தில் உள்ள எல்லோரையும் பிடிக்கும். ரொம்பப் பிடித்தவர் மொஸார்ட். அதிலும் அவருடைய மரண சங்கீதம். அதேபோல் ட்சைக்காவ்ஸ்கி. வாக்னர். அதேபோல் பீத்தோவன். சரி, பாப் இசையில் மைக்கேல் ஜாக்ஸன். அதேபோல், மரியா கேரி, பீஜீஸ், ஜஸ்டின் பீபர், ப்ரிட்னி, பெயான்ஸ், ரிஹான்னா என்று பெரிய பட்டியல் போடலாம்.
இப்படிப்பட்ட சங்கீத ரசிகனான எனக்குப் பின்வரும் குழுவையும் என் உயிருக்கு உயிராகப் பிடிக்கிறது. இந்தக் குழுவைப் பிடித்தவர்கள் எனக்குத் தெரிந்து 25 வயதுக்குள் தான் இருக்கிறார்கள். இந்த இசையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ரசிக்க முடிகிறதா? முடியவில்லை எனில் ஏன்? இந்தக் குழுவை ஏன் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனும் கொண்டாடுகிறார்கள்? இவர்களின் குரல் நாம் இதுவரை இசை என்று நம்பி வந்த குரலுக்கும் இசைக்கும் நேர் எதிராக இருக்கிறதே ஏன்? குப்பை என்று இதை ஒதுக்கி விட முடியுமா? இலக்கியம் என்பது உலகம் முழுவதும் பொதுவாக இருக்கிறது. ஆஃப்ரிக்க இலக்கியத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் எமினெம், cradle of filth போன்ற குழுக்களின் இசையை தமிழ்ச் செவிகளால் ஏன் ரசிக்க முடியவில்லை? தமிழ்ச் செவி என்பது 30 வயதுக்கு மேற்பட்ட செவி. ஒருநாள் நான் கவிஞர் ஆனந்தோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு மணி நேரம் போல் பல இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் எனக்குப் பிடித்தவர்கள். மேலே உள்ள சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள். ஒரு மணி நேரம் சென்று cradle of filth, எமினெம் பற்றிக் குறிப்பிட்டேன். என் மகன் இதையெல்லாம் கேட்டு நான் பார்த்திருக்கிறேன் என்றார் கவிஞர் ஆனந்த். அப்படியானால் நான் உங்கள் மகனோடுதான் பேச வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
காமரூப கதைகள் நாவலில் க்ரேடில் ஆஃப் ஃபில்த் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
டியர் ஜெ, இதை உங்களுக்கு வரும் எண்ணற்ற வாசகர் கடிதங்களில் ஒன்றாகக் கருதி உங்கள் ப்ளாகில் பதில் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.
ஒன்றுமில்லை… எதிர்ப் பக்கத்தை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். சரி, உங்களுக்கு ஏன் இந்த இசை பிடித்திருக்கிறது என்று நீங்கள் என்னைக் கேட்டால் எனக்கு பதில் தெரியாது. எனக்குப் பிடித்திருக்கிறது. முத்துஸ்வாமி தீட்சிதரை எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறதோ அதே அளவுக்கு எமினெம், க்ரேடில் ஆஃப் ஃபில்த் போன்ற இசையையும் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது என்று நினைக்கிறேன். தெய்வம் என்றால் அதற்கு நேர் எதிராக அரக்கன் என்ற அம்சமும் இருக்கிறது அல்லவா? வெர்னர் ஹெர்ஸாகின் நாஸ்ஃபராட்டோ பார்த்திருப்பீர்கள்… அது போல. இன்றைய வாழ்வின் இன்னொரு பக்கம் கலையாக மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னொரு பக்கம் என்றால், இருள், அதீதம், madness எல்லாம். மாதிரிக்கு நான்கு பாடல்களை அனுப்புகிறேன். முக்கியமாக நான்காவது பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
அன்புடன்,
சாரு
4.10.2014.
இரவு ஏழரை மணி அளவில் நான் அனுப்பிய மேற்கண்ட கடிதத்துக்கு அதே நாள் நள்ளிரவு 2.31 மணிக்கு ஜெயமோகன் அனுப்பியிருந்த பதில் கீழே:
அன்புள்ள சாரு நிவேதிதா,
Comments are closed.