ராஸ லீலா – பிழை திருத்தம்

ராஸ லீலா பிழை திருத்த வேலை இன்று மதியத்துக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.  சுமாராக ஒரு பக்கத்துக்கு 25 பிழைகள். எல்லாம் எழுத்துப் பிழை அல்ல.  Punctuation பிழைகள்.  இதையெல்லாம் எனக்குத் தெரிந்து பெரும்பாலான பதிப்பகங்கள் கண்டு கொள்வதில்லை.  ஆனால் என் புத்தகங்கள் அப்படி இருக்காது.  அதற்கு நான் பொறுப்பு.  ஒரு வாசக நண்பர் நீங்கள் ஏன் பிழை திருத்துகிறீர்கள்; பத்ரியிடம் கேட்டால் ஆளைக் காண்பித்து விடுவாரே என்று எனக்கு ஆலோசனை நல்கியிருக்கிறார்.  இம்மாதிரி ஆலோசனைத் திலகங்களை எத்தனைக் காலமாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  ஏன் ஐயா, எனக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கு முன் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?  அராத்து, ஸ்ரீராம், ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் ராம்ஜி, காயத்ரி போன்றவர்கள் எல்லாம் என்னோடு சும்மா வெட்டி அரட்டையா செய்து கொண்டிருப்பார்கள்?  ராஸ லீலா பிழை திருத்தத்தை ஒரு மாதமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.  இதைச் செய்ய ஆள் இருந்தால் அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்களா?  பேராசிரியர்களிடம் கொடுத்தால் இலக்கணச் சுத்தமாக பிழை திருத்தம் செய்வார்கள்.  ஆனால் உயிர் போய் விடும்.  அந்தச் சினிமா என்று போடுவார்கள்.  இலக்கணப்படி அதுதான் சரி.  ஆனால் மொழி செத்து விட்டது.  சினிமா என்பது ஆங்கில வார்த்தை.  மேலும் அதன் உச்சரிப்பு ஸினிமா.  அங்கே எப்படி ச் வரும்?  எனவே பேராசிரியர்களிடம் கொடுக்க முடியாது.  விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் யாருக்குமே பிழை திருத்தம் செய்யத் தெரியாது.  எனக்குத் தெரிந்து கார்த்திகா முகுந்த் மட்டுமே நன்றாகப் பிழை திருத்தம் செய்வார்.  என்னுடைய சில புத்தகங்களுக்கு செய்து கொடுத்திருக்கிறார்.  ஆனால் அவர் பெங்களூரில் வசிக்கிறார்.  அவரையே எல்லா நூல்களுக்கும் செய்து கொடுக்கச் சொல்லி தொந்தரவு செய்ய எனக்கு மனமில்லை.  மேலும், ராஸ லீலா 700 பக்க நாவல்.  மற்றபடி வேறு எவராலும் என் நூல்களைப் பிழைதிருத்தம் செய்ய இயலாது.  ஃப்ரெஞ்ச் வார்த்தைகள் நிறைய இடம் பெறுவதால் அதையெல்லாம் சரி செய்வது கடினம்.  இன்றைய நிலையில் நல்ல தமிழ் எழுதத் தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேரே உள்ளனர். 

எனக்குத் தெரிந்த என் மதிப்புக்குரிய நண்பர் ஒருவர் இருக்கிறார்.  பதிப்பகம் வைத்திருக்கிறார்.  மறு பிரசுரம் செய்ய வேண்டுமானால் முதலில் பிரசுரம் ஆனதை அப்படியே ஸ்கேன் செய்து கொண்டுவருவார்.  ஆனால் ஒரு பக்கத்தில் 25 பிழைகள் இருக்கும்.  அத்தனை பிழைகளோடுதான் அவர் பதிப்பகத்தின் நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அவரிடம் நான் அதைச் சொன்னதில்லை.  அவர் பதிப்பகத்தில் அவர் மட்டுமே இருக்கிறார். அவரே முதலாளி; அவரே தொழிலாளி. அவரால் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது நான் பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கும் பிரதியும் ஸ்கேன் செய்ததுதான்.  ஆனாலும் பக்கத்துக்கு 25 பிழைகள்.  ஒன்றும் செய்ய முடியாது.  நான் தான் பிழைதிருத்தம் செய்ய வேண்டும்.  யாருக்குமே தெரியவில்லையே, என்ன செய்ய?  மேலும், 50,000 பிரதிகள் விற்றால் இதற்கெல்லாம் வேலை செய்ய ஆட்கள் வருவார்கள்.  விற்பதே அம்பது பிரதி.  இதில் பிழைதிருத்தம் ஓசியில் செய்து கொடு என்றால் உதைக்கத்தான் வருவார்கள்.  தமிழ் செத்த மொழி ஐயா.  ஒரு நாவல் அம்பது காப்பி விற்றால் அது உயிரோடு இருக்கும் மொழி என்றா சொல்வீர்கள்?  ஔரங்கசீப் நாடகத்தைப் பார்த்தபோதே தமிழ் செத்த மொழி என்று தெரிந்து விட்டது.  சரி.  பேச்சு மொழியாகப் புழங்கும் ஒரு மொழியை செத்த மொழி என்று சொல்லக் கூடாது என்று நீங்கள் சொன்னால் ஓகே… ஒப்புக் கொள்கிறேன்.  தமிழ் சாகவில்லை.  ஆனால் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் பேசுவதைக் கேட்டால் அதிலும் எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

இன்னொரு முக்கியமான ஆட்சேபணையை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் புழங்கும் என் நண்பர்கள் பலர் – அவர்களில் சிலர் மொழிபெயர்ப்பாளர்கள் – ராஸ லீலாவின் இரண்டாம் பாகத்தில் வரும் கணினி உரையாடல் பகுதிகள் சலிப்பூட்டுகின்றன; திரும்பத் திரும்ப வருகின்றன; அவற்றைச் சுருக்க வேண்டும்; கொஞ்சம் வெட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள்.  நான் ஒரு நாவலை எழுதி முடித்தால் அதிலிருந்து வெளியே வந்து விடுவேன்.  சுத்தமாக மறந்தும் விடுவேன்.  அதனால் அவர்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை.  ஏன் புரியவில்லை என்றால் ஒரு எழுத்தாளன் ஒரு படைப்பை தனக்குப் பூரணமாக திருப்தி வரும்வரை திரும்பத் திரும்பவே எழுதுவான்.  நான் அப்படிப்பட்ட ஆள்.  முழுமை அடையாவிட்டால், திருப்தி ஏற்படாவிட்டால் அதை நான் வெளியிட்டிருக்கவே மாட்டேனே?  அதனால் மிகுந்த குழப்பமுற்று அராத்து, ஸ்ரீராம், ஸாம் போன்ற நண்பர்களிடம் கேட்பேன்.  இன்ன மாதிரி புகார் வருகிறது, உங்கள் கருத்து என்ன?  அப்படிக் கருத்து சொன்னவர்களை அவர்கள் கன்னாபின்னாவென்று திட்டுவார்கள்.  முடிந்தது கதை. 

இப்போதுதான் பிழைதிருத்தத்தை முன்னிட்டு நானே படித்தேன்.  அட மூடர்களே என்றுதான் முதலில் தோன்றியது.  Reality என்ற விஷயத்தை Hyper-reality என்பது எப்படி பதிலீடு செய்கிறது என்பதுதான் அந்தக் கணினி அரட்டைகளின் பொருள்.  இது தெரியவில்லை என்றால், அவர்கள் பழைய ஆட்களாகி விட்டார்கள் என்றே பொருள்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இளைய தலைமுறைக்குத் தமிழ் தெரியாது.  பழைய ஆட்களுக்கு இந்த விஷயமே புரியாது.  சலிப்பாக இருக்கும்.  புதிய ஆட்களுக்கு இது எழுதப்பட்ட மொழி தெரியாது.  மகிழ்ச்சியான விஷயம்.  வெட்டி விடுங்கள், சுருக்கி விடுங்கள் என்று சொன்ன ஆட்களெல்லாம் இப்போது என் முன் வந்தால் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியவில்லை. ஸிம்ஃபனியின் இடையே இசையற்ற மௌனம் வந்தால் இந்த மூடர்கள் அந்த இடத்தை வெட்டி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். 

Turin Horse என்ற படத்தை இப்படிப்பட்ட ஜனங்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.  வந்ததே வந்து கொண்டிருக்கிறது என்று வெட்டி விடுவார்களா?  அந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியைப் பாருங்கள்.  இரண்டரை மணி நேரப் படமே இப்படித்தான் இருக்கும்.

ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதியது:

ராஸ லீலா collectibles (Collecto’s copy) பற்றி அதிகம் பேருக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். வாசகர் வட்டத்தின் உள்வட்டத்தினர் மட்டுமே பணம் அனுப்பி முன்பதிவு செய்திருக்கின்றனர். இந்த கலெக்டிபிளின் விலை ரூ.10,000/- இதன் மதிப்பு இப்போது தெரியாது. சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனாலே இந்தப் பிரதியின் மதிப்பு தெரிய வந்து விடும். நெப்போலியன் காலத்தில் தயாரிக்கப்பட்ட கோனியாக் இப்போதும் கிடைக்கிறது. விலை இரண்டரை லட்சம் ரூபாய்.

’கலெக்டிபிள்’ என்றால் அதன் பின் அட்டையில் ராஸ லீலாவின் அந்தப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரும் நானும் சேர்ந்த புகைப்படம் இடம் பெறும். அதாவது, ஒவ்வொரு பிரதியையும் தனித்தனியே அச்சடிக்க வேண்டும். கிட்டத்தட்ட handmade காஷ்மீர் கம்பளம் மாதிரி. மட்டுமல்லாமல், புத்தகத்தின் முதல் பக்கத்தில் அந்த காப்பியை நான் யாருக்குக் கொடுத்திருக்கிறேனோ அவரைப் பற்றிய என்னுடைய சிறு குறிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கணேஷ் அன்புவின் பிரதி என்றால் அந்தப் பிரதியின் பின்னட்டையில் கணேஷ் அன்புவும் நானும் உள்ள புகைப்படம் இருக்கும். முதல் பக்கத்தில் கணேஷ் அன்பு பற்றி நான் எழுதிய குறிப்பு ஒன்றும் இருக்கும். ஒரு காப்பியின் தயாரிப்புச் செலவே 2000 ரூபாய் ஆகும். எனவே யார்யாரால் முடிகிறதோ அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மே 15உடன் இத்திட்டம் முடிவுக்கு வருகிறது. இல்லாவிட்டால் புத்தகம் கிடைக்க நீண்ட நாள் ஆகும். அநேகமாக உலக அளவில் புத்தகத் தயாரிப்பில் இப்படி ஒரு collector’s copy தயாரிக்கப்பட்டதில்லை என்று நினைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

எனவே முடிந்தவரை ராஸ லீலா கலெக்டர்’ஸ் காப்பி திட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.  கீழே உள்ள இணைப்பில் யமுனைச் செல்வன் ராஸ லீலா பற்றி எழுதிய கட்டுரை.       

 வாசிப்பு: ராஸ லீலா – கொண்டாட்டமான நாவல்

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai