ஆங்கிலக் கடிதங்கள்

எனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் பெரும்பாலான நண்பர்கள்/வாசகர்கள் அப்படி ஆங்கிலத்தில் எழுதுவதற்காக மிகவும் குற்றவுணர்ச்சி கொண்டு மன்னிப்புக் கோருகிறார்கள்.  அப்படி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்குக் காரணம், தமிழில் தட்டச்சு செய்து அவர்களுக்குப் பழக்கம் இல்லை; அவர்களது மடிக் கணினியில் அதற்கான வசதி இல்லை (சீக்கிரம் அந்த வசதியை ஏற்படுத்துக் கொண்டு விடுகிறேன்; அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள் சாரு).  இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதற்காக நான் கோபம் கொள்ளுவேனோ என்று அவர்கள் நினைப்பது போல் உள்ளது. 

இப்படியே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் எழுதுவதால் இதற்கு நான் பதில் எழுதத் துணிந்தேன். ஐயா, நண்பர்களே, எனக்குக் கொஞ்சமும் மொழிப் பற்றெல்லாம் கிடையாது.  எனக்கு என் வீட்டுப் பூனை கெய்ரோ எப்படியோ அப்படியேதான் எங்கள் அபார்ட்மெண்டில் வளரும் புஸ்ஸியும், அதன் குட்டி பட்டாணியும், ப்ரௌனியும், ரவுடியும், அடுத்த தெருவில் வளரும் என் செல்லம் ஸிஸ்ஸியும்.  என் மகனை விட எனக்கு என் வளர்ப்பு (ரவுடி) மகன் ஜெகாவைப் பிடிக்கும். பப்புவின் மரணத்தை நான் எதிர்கொண்டது, என் வாழ்வில் ராஜேஷ் என்ற நண்பரின் வருகையால்.   பப்புவை நான் உங்கள் எல்லோரிடமும்தான் காண்கிறேன். அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் – இமயமலையிலும் திருவண்ணாமலையிலும் கோவணத்துடன் சுற்றித் திரியும் துறவிகளைப் போன்றவன் நான் என்று. அப்படிப்பட்டவனுக்கு எல்லோரும் ஒன்றுதான்; எல்லா மொழியும் எல்லா நாடும் ஒன்றுதான்.   உலக மொழிகளிலேயே அரபி மொழி அளவுக்கு இனிமையான மொழி எதுவும் கிடையாது.  தமிழ், ஜெர்மன், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளெல்லாம் முரட்டு மொழிகள்; கடாமுடா மொழிகள். கெட்டியாகச் செய்யப்பட்ட சீடை போன்ற மொழிகள்.  உர்தூ, ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகள் அரபிக்கு அடுத்து இனிமை.  மேலும் என் பாட்டனே சொல்லியிருக்கிறானே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று; அப்புறம் என்ன? 

நான் தமிழை வாழ்விக்க வந்தவன் அல்ல; நான் எழுத்தாளன்.  என் எழுத்தும் என் கலையும் உலக மக்களுக்கானது.  அவ்வளவுதான். அது எந்த மொழியாக இருந்தால் என்ன?  தமிழில் எத்தனை பேர் படிக்கிறார்கள்?  எட்டு கோடித் தமிழர்களில் ஆயிரம் பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள்.  என் புத்தகம்  200 காப்பி விற்கிறது.  புத்தம் புதிய நாவல் என்றால் ரெண்டாயிரம் காப்பி விற்கும்.  ஆக, ரெண்டாயிரம் பேருக்கு எழுதுவதா ஒரு எழுத்தாளனின் வேலை? முராகாமி, ஓரான் பாமுக் போன்ற எழுத்தாளர்களை அவர்களின் மொழியிலேயே லட்சக் கணக்கான பேர் படிக்கிறார்கள்; மொழிபெயர்ப்பு இல்லாமலேயே சொல்கிறேன்.  என் எழுத்து மிக நல்ல மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.  ஆனால் இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதுபவர்களைத்தான் எழுத்தாளர்களாகவே மதிக்கிறார்கள்.  மொழிபெயர்ப்பில் கிடைப்பவர்களை தீண்டத்தகாதவர்களைப் போல்தான் நடத்துகிறார்கள்.  பெருமாள் முருகன் போன்ற ஒருசிலர் ஜாக்பாட் அடித்தவர்கள்.  அதற்கெல்லாம் முதலில் டிக்கட் வாங்க வேண்டுமே?  லாட்டரி டிக்கட் வாங்கினால்தானே ஜாக்பாட்டை எதிர்பார்க்க முடியும்?  எப்படி டிக்கட் வாங்குவது?  இந்துக் கோவில்களில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுத வேண்டும்.  கம்யூனிஸ்டுகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. இந்த ரெண்டும் பண்ணினால் ஜாக்பாட் விழலாம்.  ஆனால் அது கூட ஜாக்பாட் விழுவதற்கு உங்கள் ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம் இருக்க வேண்டும்.  அதாவது, அப்துல் கலாம் ஜனாதிபதி ஆன மாதிரி. உலக இலக்கிய விசிறிகளிடையே மொழிப் பாகுபாடு கிடையாது.  சொல்லப்போனால் மொழிபெயர்ப்புக்குத்தான் உலகில் அதிக மதிப்பு. ஆனால், பிரிட்டனில் உங்கள் புத்தகம் கிடைக்க வேண்டும். அமெரிக்காவில் கிடைக்க வேண்டும்.   அதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கப் பதிப்பகங்கள் உங்கள் புத்தகங்களை வெளியிட வேண்டும்.    அதெல்லாம் நடக்கிற கதையா?

எனக்குக் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருந்தால் நான் தமிழிலேயே எழுதியிருக்க மாட்டேன்.  பதினோரு ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டும் ஆங்கிலத்தில் சரளமாக, பிழையில்லாமல் எழுத முடியவில்லை. அதனால்தான் என் நண்பர்களிடமெல்லாம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கச் சொல்லி ஆலோசனை தருகிறேன். ஆங்கிலப் பள்ளி என்றால் நம் தெருமுனை ஆங்கிலப் பள்ளி அல்ல.  அந்தப் பள்ளிகளெல்லாம் பன்றித் தொழுவங்களுக்குச் சமமானவை.  டிஏவி, பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகள் பந்தக் குதிரைகளைத் தயார் செய்யும் குதிரை லாயங்கள்.  அவற்றுக்கும் ஞானம், கலை போன்ற சமாச்சாரங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஆங்கிலப் பள்ளிகள் என்று சொல்வது விக்ரம் சேட்டும், அமிதாவ் கோஷும் படித்த டூன் ஸ்கூல் மாதிரியான பள்ளிகளை.  அமிதாவ் கோஷ் சாஹித்ய அகாதமி பரிசு, பாரதீய ஞானபீடம் இரண்டையும் வாங்கியிருக்கிறார்.    விக்ரம் சேட் வாங்காத ஐரோப்பிய பரிசே இல்லை.  அவர் பரிசு கொடுக்கும் நிலையில் இருப்பவர். அப்படியான ஒரு பள்ளி தமிழ்நாட்டிலும் உள்ளது. அராத்துவின் மகளை ஊட்டியில் உள்ள அந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி சொன்ன போது ”எனக்கே அந்த யோசனைதான்” என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவளை அங்கே சேர்த்தும் விட்டார்.  இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண் பாடிய ஒரு ஆங்கிலப் பாடலை சமீபத்தில் கேட்டேன். ஒரு தேர்ந்த பாப் பாடகி பாடியது போலவே இருந்தது.  அவள் பிற்காலத்தில் அவள் தேர்ந்தெடுக்கும் துறையில் உலகப் புகழ் பெறுவாள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இதற்கு அந்தப் பள்ளியும் ஒரு காரணம்.  நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நம்மூர் விக்ரம் சேட், அமிதாவ் கோஷ், சல்மான் ருஷ்டி போன்றவர்களையெல்லாம் தாண்டி உலக அளவில் பிரபலமாகி இருப்பேன்.  மிக objective-ஆக அவர்களின் எழுத்தையும் என் எழுத்தையும் ஒப்பிட்ட பிறகே இந்த வாக்கியத்தை எழுதுகிறேன். தமிழில் எழுதுவதால் மட்டுமே இங்கே மைலாப்பூரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai