ஆனியன் ரவா, காஃபி, தேவாரம்…

இப்போதெல்லாம் ராமசேஷனும் நானும் ராகவனும் எங்கள் காலைச் சிற்றுண்டிக்கு மாடவீதியில் இருக்கும் ரத்னா கஃபேவுக்கு மாற்றி விட்டோம்.  மைலாப்பூருக்கு ரத்னா கஃபே வந்த புதிதில் கூட்டம் அலைமோதியது.  இப்போது அத்தனை கூட்டம் இல்லை.  நான் ரொம்ப நாளாக ரத்னா கஃபே பக்கமே போகக் கூடாது என்று இருந்தேன். காரணம், அந்த இட்லி. அது இட்லியே இல்லை. அதில் ஊற்றப்படும் சாம்பார் காரணமாகவே அதை எல்லோரும் ரசிக்கிறார்கள்.  இல்லாமல் போனாலும் இந்தியா பூராவும் அறம் வீழ்ந்தது போலவே இட்லியும் வீழ்ந்து விட்டது. இதெல்லாம் இட்லியா?  ஏழு மணிக்கு இட்லி சுட்டு, ஒன்பது மணிக்கு இட்லியை சாப்பிடுகிறீர்களே, இதை விட  இட்லிக்கு ஒரு அவமானம் தேவையா?  இட்லி என்றால் ஆவி பறக்க வேண்டாமா?  ரத்னா கஃபேவில் தரும் இட்லி நொய் இட்லி.  உளுந்து கலக்காத இட்லி. பெங்களூரில்தான் இது போன்ற இட்லிகளைச் சாப்பிடுகிறார்கள். எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது – பிராமணர்கள் கைவிடும் சமாச்சாரத்தை எல்லோரும் கை விட்டு விடுகிறார்கள் என்று. ஆனால் அவர்களுக்கு பொங்கலும் வடையும் இருக்கிறது.  அப்பிராமணர்களுக்கு? 

பல உணவகங்களை நிராகரித்து வந்து கொண்டிருக்கிறோம். மகாமுத்ரா.  ஆரம்பிக்கவே எட்டேகால் ஆகி விடுவதால் அவர்கள் ஆடம்பரமாகக் கொடுத்து நாம் ஆடம்பரமாகச் சாப்பிட்டு முடிக்க ஒன்பது ஆகி விடுகிறது.  சேஷனுக்கு அலுவலகம் போக வேண்டாமா?  ராகவனுக்கு எட்டேகாலுக்குத் தண்ணீர் பிடிக்க ஓட வேண்டும்.  இல்லாவிட்டால் பேத்தியை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்ற வேண்டும்.  மகாமுத்ரா விடுமுறை தினங்களில்தான் ஒத்து வருகிறது.  தளிகை வேஸ்ட்.  எதுவுமே சரியில்லை. காப்பி படு மோசம்.  அந்த வகையில் மகாமுத்ராவும் தளிகையோடு போட்டி போடுகிறது.  மகாமுத்ராவில் காப்பி மோசம். வாயில் வைக்க முடியவில்லை. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சங்கீதா அருமை.  காப்பியும் பிரமாதம்.  ஆனால் தூரம்.  அதனால் விடுமுறை தினங்களில் போட் கிளப் போனால் சங்கீதா. ஆனால் போட் கிளப் போனால் மன உளைச்சல் வந்து விடுகிறதே?  பின்னே என்ன?  ஒரு வீட்டு வாசலில் – மன்னிக்கவும், அது மாளிகை, வீடு அல்ல – ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. பெரிய என்றா சொன்னேன்?  இல்லை.  பிரம்மாண்டமான ஆலமரம்.  பத்துப் பேர் சேர்ந்து அணைத்தால்தான் அதை ஒரு சுற்று வர முடியும்.  அத்தனை பிரம்மாண்டம்.  அது ஒரு வீட்டு வாசலில். நான் அப்புமுதலி தெருவில் இருந்த போது வீட்டு வாசலில் ஒரு வாதநாராயண மரம் இருந்தது. அதன் இலைகள் தன் வீட்டுக் கார்களில் விழுந்து வைக்கிறது என்று அந்த வீட்டுக்காரர் மரத்தை வெட்டி விட்டார்.  ஆனால் இங்கே போட் கிளப்பில் அடுத்த வீடே ஒரு ஃபர்லாங் தூரத்தில்தான் இருக்கும்.  அப்புறம் என்ன?  இன்னொரு ஆலமரம் கூட வளரலாம்.  அல்லது, இதுவே விழுது விட்டுத் தழைக்கும், அவர்கள் வீட்டுச் செல்வத்தைப் போல.

இட்லியில் சொதப்பினாலும் தொடர்ந்து ரத்னா கஃபேவுக்குப் போவதன் காரணம், தோசையில் பின்னுகிறார்கள்.  ரவா தோசை, ஆனியன் ரவா, பொடி தோசை, பொடி ஆனியன், இன்னும் தோசையிலேயே பல ரகம். அப்புறம், காஃபி.  ஆகா, குடித்தால் அரை மணி நேரத்துக்கு அந்தக் காஃபி சுவை நாக்கிலேயே நிற்கிறது.  எதிரே கபாலி கோவில் தேவாரம்.  வேறு என்ன வேண்டும்?  ஆனால் ஒன்று, ராகவன் கூட வருவாரே தவிர, காஃபி மட்டுமே சாப்பிடுவார். சனி ஞாயிறுகளில் டிஃபனும் உண்டு. ஏன் அப்படி ஒரு “முறை” வைத்திருக்கிறார்?  தெரியவில்லை. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai