கேள்வியும் பதிலும்…

சாரு நட்பு வட்டம் – 1
எதிர்க் கருத்து, விமர்சனம் என்று சொன்னேன் அல்லவா? செல்வகுமார் கணேசன் சாரு மீது நியாயமான விமர்சனம் வைத்தார். ப்யூகோவ்ஸ்கி எனக்கு குமாஸ்தா அல்லது ஆஃபீஸ் பாய் போல என்று சாரு சொல்கிறார். நல்லது… ஆனால் அராத்து, அய்யநார் விஸ்வநாத்தை எல்லாம் உலக ரேஞ்சிக்கு புகழ்கிறாரே, அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?
அராத்து, அய்யனார் எல்லாம் ப்யூகோவ்ஸ்க்கியை விட மிகப்பெரிய ஆளுங்களா?

***
மேலே உள்ளதை பதிவு செய்திருப்பவர் அராத்து. கேள்வி கேட்டவர் செல்வகுமார் என்பது மேலேயே இருக்கிறது.
கேள்விக்குள் செல்வதற்கு முன்னால் சில விஷயங்கள். சாரு வாசகர் வட்டம் முன்பெல்லாம் மாதம் ஒருமுறை கூடும். எங்காவது கடற்கரைப் பகுதியில் (அநேகமாக மகாபலிபுரம்) அல்லது மலைப் பிரதேசத்தில். ஊட்டி, கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு என்று பல இடங்கள் ஞாபகம் வருகிறது. ஆனால் கடந்த நாலைந்து ஆண்டுகளாகக் கூடுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை சீனியின் புத்தக வெளியீடு மேற்கண்ட இடங்களில் நடக்கும் போது நானும் அதில் கலந்து கொள்வதோடு சரி. ஆனால் அந்தப் புத்தக வெளியீட்டுக் கூட்டங்கள் நம் வாசகர் வட்ட அமர்வுகளைப் போல் இருப்பதில்லை. வாசகர் வட்டச் சந்திப்புகள் என்பவை எப்போதும் தேர்ந்தெடுத்த நண்பர்களை மட்டுமே கொண்டவையாக இருக்கும். அதில் நான் மாலை ஏழு மணியிலிருந்து காலை ஐந்து வரை உங்களோடு உரையாடுவேன். மதுரையில் அந்தப் புராதனமான லாட்ஜில் இரவு முழுவதும் பகல் முழுதும் பேசிக் கொண்டிருந்தோம். ஓரிரு முறை நேசமித்ரனும் கலந்து கொண்டிருக்கிறார்.
இனிமேல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் நாம் அப்படிக் கூடலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இங்கே ‘ஓம்’ என்று முடித்திருப்பது சந்நிதான தொனியில் அல்ல; இரண்டு மூன்று நண்பர்களாகச் சேர்ந்து முடிவு செய்தோம். இதை ஏன் இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் என்றால், செல்வாவின் மேற்கண்ட கேள்வி இது போன்ற பொதுவெளியில் ஒற்றைக் கேள்வி ஒற்றை பதிலாக எழுதித் தீர்க்கப்படும் விஷயம் அல்ல. அந்தக் கேள்வி நம்முடைய வாசகர் வட்டத்தில் வைக்கப்பட்டு பொதுவாக விவாதிக்கப்படும் தகுதி கொண்டது. உங்களுக்கே தெரியும், நான் தேவதச்சனையோ நேசமித்ரனையோ போன்றவன் அல்ல. நான் ஒரு கருத்தை விவாதத்தின் மூலமாகவோ, உரையாடலின் மூலமாகவோதான் சென்றடைவேன். அப்படிச் சென்றடைவதற்கு, அந்தப் பயணத்திற்கு நான் படித்த படிப்பும் கூட இருக்கும் நண்பர்களின் கேள்விகளும் அவதானங்களும் உறுதுணையாக இருக்கும். நான் எந்தக் காலத்திலும் பிரசங்கம் செய்வதில்லை. இதனால் பிரசங்கம் செய்வதை மரியாதைக் குறைவாகக் கருதுபவனும் அல்ல. மனித இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போது ஒருவனுக்கு “ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்று தோன்றி விட்டதென்றால், அவன் மலை உச்சியில் நின்று பிரசங்கம் செய்தே ஆக வேண்டியவனாகிறான். ஆனால் நான் பின்நவீனத்துவ மனிதன். என்னை உங்களுடைய கேள்விகளும் விவாதங்களும் உரையாடல்களும் இவற்றின் கூடச் சேர்ந்து என் படிப்பும்தான் உருவாக்குக்கின்றன. அப்படிப் பார்த்தால் செல்வாவின் மேற்கண்ட கேள்வி இது போன்ற இடங்களில் (முகநூல்) ஒற்றைக் கேள்வி ஒற்றை பதில் சொல்லக் கூடியதாக இல்லை.

இந்தக் கேள்வியை நம் வாசகர் வட்டத்தில் கேட்டிருந்தால் எடுத்த எடுப்பில் “இது ஒரு தப்பான கேள்வி” என்று சொல்லியிருப்பேன். எப்படி? நான் அடிக்கடி சொல்லும் ஒரு உதாரணம்தான் இங்கே கை கொடுக்கும். இயற்பியலில் வரும் ம்யூ என்ற கோட்பாடு என்ன சொல்கிறது? ஆம் அல்லது இல்லை என்பதற்கு அப்பாற்பட்ட ஒரு நிலை ம்யூ. ஜென் பௌத்தத்திலும் இது வரும். நீங்கள் கேள்வியையே தப்பாகக் கேட்டால் பதில் ஆமாமும் இல்லை; இல்லையும் இல்லை. பிறகு? ம்யூ. ஒரு உதாரணம். குடித்து விட்டு வந்து உன்னை அடித்துக் கொண்டிருந்த உன் கணவன் இப்போது அடிப்பதை நிறுத்தி விட்டானா?

இதுவும் ஒரு கேள்விதானே? இல்லை. இது ஒரு பதில். இது ஒரு ஸ்டேட்மெண்ட். இந்தக் கேள்விக்கு நீங்கள் எப்படி ஆமாம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்ல முடியும். ஆமாம் என்றால் இதுவரை அடித்தான் என்று ஆகிறது. இல்லை என்றால் இன்னமும் அடிக்கிறான் என்று ஆகிறது. அவன் அடித்ததே இல்லை. அதனால் ம்யூ. இப்படித்தான் செல்வாவின் கேள்வியும். இரண்டு வெவ்வேறான இடங்கள். இரண்டு வெவ்வேறான ஆட்கள். இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள். ப்யூக் சுமாராக நாற்பது ஆண்டுகள் எழுதியவன். நீங்கள் குறிப்பிடும் நண்பர்களின் வயதே அவ்வளவுதான் இருக்கும். இப்போதுதான் இவர்கள் எழுதவே ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று நாவல் வந்திருந்தாலும் நான் அப்படித்தான் சொல்வேன். இந்த இடம் அப்படி. இந்தச் சூழல் அப்படி. இந்தக் கேள்வி அப்படி. ஆக, நாற்பது ஆண்டுகள் எழுதியவனையும் நாற்பது வயது ஆனவர்களையும் ஒப்பிடுவதே தவறு.

மேலும், இப்போது சொல்லப் போவது மிக முக்கியமானது. ப்யூக் உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு இலக்கியக் கடவுள். அவனுக்கென்று தனிப்பட்ட அமைப்புகள் உள்ளன. அது ஒரு cult. ப்யூக் எழுதியதெல்லாமே இலக்கியம். அவன் எழுதிய ஒரு மளிகைக்கடை ரசீது கூட பொக்கிஷம். இப்படிப்பட்ட ஒருவனையும் இலக்கியவாதி என்றே ஒப்புக்கொள்ளப்படாத – இனிமேலும் எந்தக் காலத்திலும் அதற்கான சாத்தியமே நிகழாத, சொல்லப் போனால் இலக்கிய விரோதி என்று கருதப்பட்டுக் கொண்டிருக்கும் அராத்துவையும் நாம் ஒப்பிடலாமா? அய்யனார் இந்த இடத்துக்கு வர மாட்டார். அவருடைய எழுத்து வேறு. அவர் நிச்சயம் கொண்டாடப்படுவார். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அராத்துவைக் கொண்டாடுபவர்கள் எ-ப்-போ-து-மே இலக்கியத்துக்கு வெளியே இருக்கும் ஆட்கள்தான். இலக்கியவாதிகள் அவரை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். அதைப் பற்றிய கவலையும் அவருக்கு இல்லை. தமிழ்நாடு போன்ற ஒரு ஃபிலிஸ்டைன் சமூகத்தில் அவரைக் கொண்டாடினால் என்ன, கொண்டாடாவிட்டால் என்ன? ஆ-னா-ல் அவருடைய வாசகர்கள் அவரை ஒரு ராக் ஸ்டாரைப் போல் கொண்டாடுகிறார்கள். அவருடைய நாவல் ஆயிரக் கணக்கில் விற்கிறது என்பதே அதற்கு சாட்சி.

நாம் செல்வாவின் கேள்விக்கு வருவோம். அதற்கு என் நேரடியான பதில்: சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி உருவாக்கியது ஒரு literary canon. அதையும் அராத்துவையும் ஒப்பிட இயலாது. இன்னும் 40 ஆண்டுகள் போனால் ஒப்பிடலாம் என்றால் அதுவும் இயலாது. ஏனென்றால், ப்யூக்கையும் விஞ்சி ஒருத்தன் ரெண்டு பேர் முளைப்பான். அப்போது அந்த ஒப்பீடே காலாவதி ஆகி விடும். சரி, இப்போதைக்கு என் பதில்: ஆம், ப்யூக்கின் அஞ்சல் நிலையம் போன்ற நாவல்களை விட அய்யனாரின் ஓரிதழ்ப் பூவும் பொண்டாட்டியும் better novels. ஆனாலும் ப்யூக்கின் அடையாளம் அவனுடைய எழுத்து மட்டும் அல்ல; அவனைக் கொண்டாடுபவர்கள் அவனுடைய எழுத்துக்காக மட்டும் கொண்டாடவில்லை. ப்யூக்கின் வாழ்க்கையை வேறு எந்த மனிதனும் வாழ்ந்ததில்லை. ப்யூக்கின் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பதற்குக் கூட எனக்கும் அய்யனாருக்கும் தகுதி இல்லை. அராத்து ஓரளவு எட்டிப் பார்க்கலாம். ப்யூக்கின் வாழ்க்கை ஒரு பேய் பிசாசின் வாழ்க்கை. ப்யூக்கைப் போல் வாழ்ந்தவர்கள் யாருமே இல்லை. அவன் ஒருத்தன் தான். அப்படி என்ன வாழ்ந்து விட்டான் என்று கேட்கிறீர்களா? 65 வயதில் அவன் தேகத்தில் ஒரு பிரச்சினை வந்தது.

பெருங்குடிகாரன் ப்யூக். இன்னும் ஒரு பெக் போட்டால் கூட மேலே தான் என்றார் டாக்டர். ஓ, அப்படியா என்று சொல்லி விட்டு இன்னும் இன்னும் குடித்தான் ப்யூக். அநேகமாக அதற்குப் பிறகும் ஒரு பத்தாண்டுகள் வாழ்ந்தான். குடித்துக் கொண்டே. இன்னும் சொல்ல வேண்டுமானால், ஒரு வாசகர் வட்டம் கூட்டம் போடுங்கள், சொல்கிறேன். அல்லது, ஊரின் மிக அழகான பெண் என்று ப்யூக் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறான். அதே தலைப்பில் அமைந்த என் தொகுதி இன்னும் இரண்டு வாரங்களில் உங்கள் கைகளில் கிடைக்கும். அந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். ப்யூக் எழுதியது எதுவுமே புனைவு அல்ல. எல்லாமே சுயசரிதை. ஊரின் மிக அழகான பெண்ணும்தான். சந்திப்போம்.

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai