ஆனது ஆகட்டும்…

நமக்கு முகம் தெரியாமல் நம் நண்பர்களாக முகநூலில் புழங்குபவர்கள் பலர் நம்மிடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் என்பதை கவனித்திருக்கிறீர்களா? நான் முகநூலில் இருப்பதற்குக் காரணம், சமூகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே ஒரு தொடர்பு சாதனம் அதுதான். மற்றபடி நான் செய்தித்தாள் கூடப் படிப்பதில்லை. தொலைக்காட்சி என் வீட்டிலேயே இல்லை. நேற்று பூனைகளின் நிலை பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்:

வீட்டில் மூட்டை மூட்டையாக பூனை உணவு இருக்கிறது. நாலைந்து பூனைகள் தரைத் தளத்தில் பசியில் கிடந்து கதறுகின்றன. ஒரு பூனை மாடியே ஏறி வந்து கதறியது. ஆனாலும் பூனைக்கு உணவு தரக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறான் என் அடுத்த வீட்டுக்காரன். மீறிக் கொடுத்தால் வாழ விட மாட்டேன் என்கிறான். பெரும் பிரச்சினை கொடுக்கிறான். எல்லோரையும் மூளைச் சலவை செய்து எல்லோரையும் கூட்டிக் கொண்டு வந்து நியாயம் கேட்கிறான். அதனால் பூனையின் கதறலை சகித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதைப் படித்த ஒருவர் ”தெரியாம குடுங்க 😠 உணவ வெச்சிக்கிட்டே, ஒருத்தவங்க பசியில இருக்கும் போது அப்டி செய்ய கூடாது.. பாவம் பசியில செத்திட்டா என்ன செய்வீங்க” என்று காமெண்ட் எழுதியிருந்தார். அவரை உடனடியாக ப்ளாக் பண்ணி விட்டேன். இதுபோல் எனக்கு அறிவுரை சொல்லாதீர்கள் என்று நான் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். தெரியாமல் கொடுக்க எங்களுக்குத் தெரியாதா? மூன்று வாட்ச்மேன்களுக்குத் தெரியாமல் எப்படிக் கொடுப்பது? பசியில செத்திட்டா என்ன செய்வீங்க என்ற கேள்வி வேறு. என்ன செய்வேன்? நாண்டுக்கிட்டு சாவேன், இந்த மாதிரியெல்லாம் முகநூலில் கிடந்து லோல் பட வேண்டியிருக்கிறதே என்று.

இன்று இன்னொரு பிரகஸ்பதி எல்லாத்தையும் வீட்டிற்குள் கூட்டி போய் கொடுங்க சாப்பிட்டு போய்டும் என்று அறிவுரை பகன்றிருக்கிறார். அடடா அறிவுக் கொழுந்து. அப்படியே திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் போலிருக்கிறது எனக்கு. ஏன் சாமி, 15 பூனைகளை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனால் என் பக்கத்து வூட்டுக்காரர் என் மேல் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவார். ஏற்கனவே அவர் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவரை பூனைகளால் நாங்கள் தொந்தரவு செய்கிறோம் என்று.

ஆனாலும் ஆனது ஆகட்டும் என்று மீண்டும் பூனைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டோம். இரண்டு தினங்களாக எல்லா பூனைகளும் பசியில் கதற ஆரம்பித்து விட்டன. வீட்டில் மூட்டை மூட்டையாக பூனை உணவை வைத்துக் கொண்டு இப்படி பூனைகளை பசியில் கதற விடுகிறோமே என்று இருவரும் யோசித்தோம். சரி, வந்தது வரட்டும் என்று இன்று காலையிலிருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டோம். என்ன, அடித்தா கொன்று விடுவார்கள்? என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

பூனை உணவு இரண்டு மாதத்துக்குக் காணும். ஆனால் wet cat food சுத்தமாகக் காலி. whiskas wet cat food என்று இருக்கும். tuna flavour அல்லது salmon Plus one. kittensக்காக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சால்மன் kittensக்கு இருக்காது. ஆர்டர் செய்ய முடியுமா பாருங்கள். எனக்கு மெயில் பண்ணினால் முகவரி அனுப்புகிறேன்.
charu.nivedita.india@gmail.com

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai