பின்வரும் சம்பவத்தை ஏதோ ஒரு நாவலில் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் அதை இங்கே மீண்டும் இங்கே சொல்லத் தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு நெருங்கிய நண்பனின் அலுவலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். நண்பன் தான் அங்கே சீஃப்கீழே பணிபுரியும் ஊழியர்கள் கிளம்பி விட்டார்கள். மாலை ஆறு இருக்கும். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தார். அம்பதாகக் கூட இருக்கலாம். என் வயது அப்போது நாற்பது. அந்தப் பெரியவரை சமீபத்தில் பார்த்தபோது கூட அதே அம்பது அறுபது வயதுக்காரரைப் போலவே இருந்தார். அவரது முப்பது வயதிலும் கூட அறுபது வயது போலவே இருந்திருக்கக் கூடும். முப்பதிலும் அறுபது; எண்பதிலும் அறுபது. அப்படி ஒரு தோற்றம். அதிகம் எழுதாவிட்டாலும் சிறு பத்திரிகைகளிலும் இலக்கியவாதிகள் மத்தியிலும் மிகவும் பிரபலம். எப்படி பிரபலம் என்றால், அவர் பெயரைக் கேட்டாலே எல்லோரும் உற்சாகம் அடைவார்கள். கலகலப்பான மனிதர். இலக்கிய ரசிகர். க.நா.சு.வின் நண்பர். எக்கச்சக்கமாகப் படித்தவர். எல்லோருடைய மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர். இலக்கியத்திலேயே ஊறித் திளைக்கும் மனிதர். இலக்கியத்திலேயே வாழ்பவர். இளைஞர்கள்தான் அவருக்கு அதிக அளவில் நண்பர்கள். அவருடைய மற்றொரு குண விசேஷம், மற்ற இலக்கியவாதிகளைப் போல் எந்த வம்புதும்புக்கும் போகாதவர். இனிமையின் மொத்த உருவம். சுரேஷும் நானும் சுரேஷின் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர் வருகிறார். வசதிக்காக அவர் பெயரை வள்ளலார் என்று வைத்துக் கொள்வோம். அவர் குணத்துக்கு அந்தப் பெயர்தான் ஏற்றது.
சுரேஷும் அவரும் பேச ஆரம்பித்தார்கள். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம்? சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும். எட்டு மணி அளவில் கிளம்பிப் போய் விட்டார் வள்ளலார். வள்ளலாரை நான் சில முறை மற்ற இடங்களிலும் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. அறிமுகமும் இல்லை. யாரும் அறிமுகப்படுத்தியதும் இல்லை. வள்ளலாருக்கு அறிமுகம் தேவையா எனவும் நினைத்திருக்கலாம். சுரேஷின் அலுவலகத்தில் இத்தனை நெருக்கத்தில் இவ்வளவு நேரம் பக்கத்தில் இருந்து பார்ப்பது. சுரேஷும் கன்னாபின்னாவென்று உலக இலக்கியம் பயின்றவன்.
அந்த இரண்டு மணி நேரத்திலும் நடந்த ஒரு விஷயத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். வள்ளலார் அந்த இரண்டு மணி நேரமும் என் பக்கமே திரும்பவில்லை. என்னோடு ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் இருவரையும் தவிர இன்னொரு மனிதனும் இருக்கிறான் என்ற பிரக்ஞையே அவருக்கு இல்லை. இத்தனைக்கும் அவரைத் தொடுகின்ற அளவு தூரத்தில் அமர்ந்திருக்கிறேன். அந்த இடத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய சேம்பர். எதிரே அலங்கார நாற்காலியில் சுரேஷ். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். அவன் எதிரே நாங்கள் இருவர் பக்கத்துப் பக்கத்தில். ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இடையில் Michel Houllebecq பற்றியும் விரிவாகப் பேசுகிறார்கள். பெரியவர் எந்த அளவுக்கு உலக இலக்கியத்தில் சம காலத்தவராக இருக்கிறார் என்பதற்கு மிஷல் வெல்பெக் ஒரு உதாரணம். அவர் கிளம்பிய பிறகு நான் கெட்ட வார்த்தைகளைக் கலந்து (அப்போது அப்படித்தான் பேசுவேன்) “யார்ப்பா இந்த ஆளு, மரியாதை தெரியாத ஆளா இருக்கான்? ரெண்டு மணி நேரமா ஒங்கிட்ட பேசுறான். என் பக்கம் கூடத் திரும்பலியே… முட்டாக்… என்ன அயோக்கியத்தனம்?” என்று சற்று காரமாகக் கேட்கிறேன்.
அதற்கு சுரேஷ், ”அடப்பாவி, உனக்கு ராசியே சரியில்ல போல இருக்கே? வள்ளலாரை அவன் இவன்னு பேசின முதல் ஆள் நீ தான்யா. அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? எவ்வளவு இனிமையானவர் தெரியுமா? ஊரே அவரைக் கொண்டாடுதுப்பா… உனக்குத்தான் ராசி சரியில்ல. ஆமா, அவர் உன் கிட்ட பேசலியா என்ன? நான் கவனிக்கவே இல்லை. நாம மூணு பேரும்தான் பேசிட்டு இருக்கிறதா நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்” என்கிறான்.
அந்த வள்ளலார் என்னோடு இரண்டு மணி நேரமும் ஒரு வார்த்தை பேசவில்லை, என் பக்கம் திரும்பக் கூட இல்லை என்பதை சுரேஷ் கவனிக்கவே இல்லை. அப்போது சுரேஷிடம் இன்னொன்றும் சொன்னேன். தமிழின் மிஷல் வெல்பெக் உங்கள் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறான். நீங்களோ ஃப்ரெஞ்ச் வெல்பெக் பற்றிப் பினாத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
சுரேஷ் உள்ளுக்குள் நகைத்திருப்பான். அவனுமே என்னை ஒரு போலி எழுத்தாளன் என்றுதான் நினைக்கிறான் என்று தெரிந்ததுமே நான் அவனை விட்டு விலகி விட்டேன். இப்போது இந்த சம்பவத்தை அவனிடம் யார் சொன்னாலும், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, வள்ளலார் என் அலுவலகத்துக்கு வந்ததே இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவான். அப்படித்தான் இருக்கிறது என் வாழ்க்கை.
அதற்குப் பிறகும் முந்தாநாள் வரை வள்ளலாரை நான் இலக்கிய விழாக்களிலும் புத்தக விழாவிலும் நண்பர்கள் கூடுமிடங்களிலும் சுமார் நூறு முறை பார்த்திருப்பேன். என்னை அவர் பார்த்ததே இல்லை. கண்களில் வெறுப்பும் தெரியாது. என்னை அவர் முழுமையாகவே தவிர்த்தார். முதலில் அவர் கன்னத்தில் ஒரு அறை விடலாமா என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. பெருத்த அவமானமாக இருக்கும். பிறகு அது அவருடைய சுதந்திரம் என்று புரிந்து கொண்டேன். நான் யார், நான் எவ்வகையான எழுத்தை எழுதுகிறேன் என்று என்னையே பார்த்துக் கொண்டேன். பிறந்து விழுந்தவுடன் ஒரு குழந்தை கெட்ட வார்த்தை பேசினால் அந்தக் குடும்பம் எப்படி அதிர்ச்சி கொள்ளும்? அதேபோல் என் முதல் கட்டுரையே ஜே.ஜே. சில குறிப்புகளை ஒரு போலி நாவல் என்று விமர்சித்த கட்டுரைதான். அப்போது சு.ரா. ஒரு கடவுள். அதிலும் ஜேஜே ஒரு கிளாஸிக்காகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டு இலக்கியச் சூழலே ஒரு ஆரவாரக் கொண்டாட்டமாக இருந்தது. அப்போது போய் அது ஒரு போலி என்றேன். என்ன ஆகும்? ஒரு அசிங்கத்தைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள். அந்த அசிங்க உணர்வுதான் வள்ளலாரை முந்தாநாள் வரை தொடர்ந்தது என்று நினைக்கிறேன். அல்லது, வேறு காரணமாகவும் இருக்கலாம். அவருடைய கடவுளான மௌனியை நான் குப்பை என்று சொன்னதும் காரணமாக இருக்கலாம். எதுவென்று தெரியவில்லை.
அவர் முந்தாநாள் கொரோனாவினால் இறந்து விட்டார். இலக்கிய உலகில் எத்தனையோ ஆச்சரியங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. வள்ளலாராகவே இருந்தாலும் என்னைக் கத்தியை எடுத்துக் குத்தி விடுவார் என்று அடிக்கடி நான் எழுதுவதுண்டு அல்லவா? அந்த வள்ளலார் இந்த வள்ளலார்தான். அவருக்கான மிக உருக்கமான, மிக சுவாரசியமான இரங்கல் கட்டுரையை என் நண்பர் பால சுப்ரமணியன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதைப் படித்தபோது இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது.
***
கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai