அண்ணா நூலகத்தில் பேசுகிறேன்

மனுஷ்யபுத்திரனின் தலைமையில் மாணவர்களுக்கான பயிலரங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் ஒரு பகுதியாக வரும் திங்கள்கிழமை (20 மே) அன்று காலை பதினொன்றரை மணி அளவில் அண்ணா நூலக அரங்கில் உலக சினிமா பற்றிப் பேசுகிறேன். இந்தப் பயிலரங்கு மாணவர்களுக்கானது என்பதால் இதை வாசிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். ”இளையராஜாவை ஏன் விமர்சிக்கிறீர்கள்?” என்பது போன்ற தனிப்பட்ட கேள்விகளைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் உலக சினிமா பற்றி நூறு மணி நேரம் பேசுவதற்கு விஷயங்கள் உள்ளன. அதை என் வாசகர்கள் படித்திருக்கலாம்; என் உரைகளில் கேட்டும் இருக்கலாம். ஆனால் மாணவர்கள் அவற்றை அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்து கொள்ள இந்த எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள்: +91 7845221882