யாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்
1 நான் யாசகர் இனத்தின் நிழல்,ஈராயிரம் ஆண்டுகளின் எலும்புகளில்என் மூதாதையர் கையேந்தினர். வயல்களில் பறவைகளுடன்தானியத்தின் தூசைப் பகிர்ந்தோம்உப்பு புளி மிளகாய்—தெருக்களில் பாடி யாசித்தோம். அன்னையிடம் உழைப்பையும்கன்னியரிடம் காதலையும் காமத்தையும்நண்பரிடமும் பெயரறியா அன்பரிடமும்எண்ணிலாப் பொருளை யாசித்தேன். புரியா தவறுகளுக்கும் மன்னிப்பையாசித்தேன் ஒரு கை அன்னமளித்ததுமற்றொரு கை ஆடையளித்ததுஇன்னொரு கை இடமளித்தது ஆயிற்று அகவை எழுபத்து மூன்றுயாசகம் சலித்தாலும் மீறவொரு வழியில்லைஆசானின் இல்லத்தில்அடுத்த வேளை அன்னம்யாசித்தே பெற வேண்டும்.இது மண்ணின் விதி. 2 ஆறுதல்:அரசனே ஆனாலும்ஆசானின் தாள் பணிவான். 3 … Read more