நான்தான் ஔரங்கசீப்…

இன்று (29 ஜூலை 2021) இரவு 9 மணிக்கு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் அத்தியாயம் bynge.in செயலியில் வெளியாகிறது. நாளை காலை ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. அதை அடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வெளிவரும்.

ஞானக்கூத்தன்

வணக்கம் சாரு, நான் பெங்களூரில் இருந்து இலட்சுமி நரசிம்மன் எழுதுகிறேன். நான் உங்களுடைய ஒரு இளம் வாசகன். எனக்கு ஒரு ஐயம். எனக்கு நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைத் தொகுப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. எத்தகைய கவிதைத் தொகுப்பு என்றால், நான் மனதளவில் சோர்ந்து போய், இருக்கும்போது எனக்கு நம்பிக்கை அளித்து, உற்சாகம் ஊட்டி, இன்னும் வீரியமாக என் பணிகளைத் தொடர வைக்க வேண்டும் மற்றும் என் தனிமைக்கு மருந்து அளிக்கும் வண்ணம் அக்கவிதைகள் இருக்க … Read more

ஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…

அந்தக் காலத்து சினிமாவைப் பார்த்தால் தெரியும், அதில் வரும் அத்தனை கதாபாத்திரமும் பிராமண பாஷைதான் பேசும். மீன்காரர் கூட பிராமண பாஷைதான். இப்போது பார்த்தால் சிரிப்பாக இருக்கும். அப்படித்தான் இப்போதைய பல ஜாங்கிரி கதைகளில் வரும் எல்லா பாத்திரங்களும் ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி, புத்தர் மாதிரி பேசுகிறார்கள். சினிமா தியேட்டரில் ப்ளாக் டிக்கட் விற்பவன் கூட ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி பேசினால் எப்படி இருக்கும்? இதெல்லாம்தான் நவீன சிறுகதைகள்! ஒரு தப்பு இல்லை. எல்லாம் கனகச்சிதமாக உள்ளது. … Read more

புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்? (2)

இந்த விவகாரத்தை இத்தோடு விட மனமில்லாமல் என் நண்பர் ஒருவரிடம் பேசினேன்.  அவர் bubble wrap பேப்பர் போட்டுப் பார்சல் கட்டினால் இந்தப் பிரச்சினை இல்லை என்றார்.  ஆனால் டபிள் ராப் பேப்பர் சாதா பேப்பர் கட்டை விடப் பல மடங்கு செலவு அதிகம்.  சரி.  ஏற்கனவே பதிப்பகங்கள் லாபம் இல்லாமல் நடக்கின்றன.  புத்தகம் வாங்குபவர்களால் அவர்களுக்கு அநாவசிய செலவு வேண்டாம்.  இப்போது என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சாதா பேப்பரிலேயே கட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.  கத்தரிக்கோலால் … Read more

புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்?

இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது.  புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்.  வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார்.  இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம்.  சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள்.  நூலாக வந்துள்ளன.  மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள்.  நூல் வந்ததா எனத் தெரியவில்லை.  படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன.  புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை.  வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது … Read more