உலக மாடுகளே ஒன்று படுங்கள்!

எஸ்.ரா.வின் வாதத் திறமை ஊர் அறிந்தது.  மற்றொரு ராம் ஜெத்மலானி.  அவரோடு போட்டி போடக் கூடிய ஒரே ஒரு எழுத்தாளர்தான் தமிழ்நாட்டில் உண்டு.  தினந்தோறும் தொலைக்காட்சியில் தோன்றி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  அம்மாதிரி இடத்திலெல்லாம் என்னைப் போன்ற சோனி சோப்ளாங்கிகள் பேச முடியுமா?  நேற்று புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி வந்து விட்டது.  எஸ்.ரா. ஜல்லிக்கட்டு ஆதரவு.  சாமானியர்கள் பேசினால் புரிந்து கொள்ள முடிகிறது.  புத்திஜீவிகளும் எழுத்தாளர்களுமே மிருகவதைக்கு ஆதரவாகப் பேசுவதை … Read more

இரண்டு நேர்காணல்கள் மற்றும் இருநூறு ரூபாய் கடன்…

பொதுவாக தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது போன்ற அறிவான கேள்விகளே கேட்கப்படும்.  ஆனால் இப்போது கொஞ்சம் மாறி விட்டது.  மக்கள் தொலைக்காட்சியில் என்னோடு உரையாடிய கௌதம் மற்றும் அபர்ணா இருவரும் அந்த நேர்காணலை மிகவும் சுவாரசியமாகவே செய்தனர்.   என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர்.  அந்த நேர்காணல் இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக அறிந்தேன்.  பார்த்தவர்கள் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர்.  நான் கடந்த சில … Read more

மண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை

மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு எதுவும் தயாரித்துக் கொள்ளாமல் போனேன்.  சிறப்புரை திருப்பூர் கிருஷ்ணன் என்பதால் நான் ஒரு ஐந்து நிமிடம் சம்பிரதாயமாகப் பேசலாம் என எண்ணினேன்.  ஆனால் கிருஷ்ணன் பேசி முடிக்கும் போது சாருவின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒரு போடு போட்டு விட்டு அமர்ந்து விட்டதால் திடீரென்று களமிறக்கப்பட்ட ஆட்டக்காரனைப் போல் ஆனேன்.  இருந்தாலும் மனசு பூராவும் மண்ணில் தெரியுது வானம் பொங்கி வழிவதால் நாற்பது நிமிடங்கள் … Read more

ந. சிதம்பர சுப்ரமணியனின் நூல் வெளியீட்டு விழா

நாளை மாலை ஆறு மணிக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள  பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா அரங்கில் ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலின் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி.  நற்றிணை பதிப்பகம்.  இந்த நாவல் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல் இது.  தமிழ் தெரிந்த அத்தனை பேராலும் வாசிக்கப்பட வேண்டிய நாவல். முக்கியமாக பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் … Read more

வாசக சாலை ஆண்டு விழா

வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து சென்ற என் வாரிசுகளான ஞான பாஸ்கர் ராஜா, பார்த்திபன், கார்த்திகேயன், மனோஜ், அருண் ஆகியோர் மற்ற சில நண்பர்களுடன் சேர்ந்து வாசக சாலை என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் இலக்கியச் சந்திப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.  வாசகசாலையின் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.  நானும் பங்கேற்கிறேன், பார்வையாளனாக.  அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா போன்ற நண்பர்கள் உரையாற்றுகிறார்கள். வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த … Read more