ஒரு சிறிய நடவடிக்கை

என் இயக்கத்தின் தளபதிகளாக இருக்கும் ராஜ ராஜேந்திரன் மற்றும் பிச்சைக்காரன் இருவரையும் சாரு நிவேதிதா வாசகர் வட்டத்திலிருந்து நீக்குகிறேன்.  அவர்கள் இருவரும் என்னைச் சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்…

எக்ஸைல் (புதிது)

எக்ஸைல் முடித்து விட்டேன்.  மொத்தம் 850 பக்கங்கள்.  ஒரு லட்சத்து அறுபதாயிரம் வார்த்தைகள்.  இன்னும் கடைசி அத்தியாயம் எழுத வேண்டும்.  அதை ஒரு பத்து பக்கங்களில் முடிப்பேன் என்று நினைக்கிறேன்.  எங்கேனும் ஒரு நதிக்கரையில்தான் அதை எழுத வேண்டும்.  இரண்டு நண்பர்களிடம் படிக்கக் கொடுக்க இருக்கிறேன்.  ஒருவர் எனக்குப் பிடித்த இலக்கியவாதி.  இன்னொருவர் இலக்கியவாதி என்று அடையாளத்தை வெறுக்கும் இலக்கியவாதி.  ராஸ லீலாவை விட நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.  நண்பர்கள் இருவரும் தாங்கள் என்ன நினைத்தாலும் … Read more

இன்று ஒன்று நன்று : அராத்து

மோட்டார் விகடன் பத்திரிகையில் அராத்து ஒரு தொடர் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  அதே பத்திரிகையின் இன்று ஒன்று நன்று என்ற தொலைபேசிப் பேச்சு பகுதியில் அராத்து செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் பேசுகிறார்.  044-66802916 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் அவர் பேச்சைக் கேட்கலாம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பேசுகிறார்.  எழுத்தில் தான் வளைத்துக் கட்டி அடிக்கிறார் என்றால் பேச்சிலுமா என்று நினைத்துக் கொண்டேன்.  நானெல்லாம் பேச்சில் ஏ.ஆர். ரஹ்மான் மாதிரி.  எல்லாப் புகழும் … Read more

இமயமலைப் பயணக் குறிப்புகள் : அன்பு

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த கணேஷ் அன்பு இமயமலைப் பயணக் குறிப்புகளை எழுதத் துவங்கி விட்டார்.  எக்ஸைல் வேலையில் நான் மூழ்கிக் கிடப்பதால் அதை எழுத முடியாமல் இருந்தது.  கணேஷ் என் சுமையைக் குறைக்கிறார்.  அவர் எழுத விட்டதை நான் எழுத முயல்கிறேன்.  இன்னும் இரண்டு நாளில் எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  எனக்கு யாரையும் அன்பு, பாசம், அறிவு, நட்பு, தமிழ், விடுதலை, புரட்சி, தியாகம், சுதந்திரம், அழகு என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்க … Read more

What is love? – a “short” story by Araathu

என் எழுத்தை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும், எனக்கு வேண்டியவர்கள் என்பதற்காக எந்தச் சலுகையும் கொடுக்க மாட்டேன் என்பது.  சில நியாயவாதிகள்  வேண்டியவர்கள் என்பதற்காகவே கடுமையைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கொடுமையாக நடந்து கொள்வார்கள்.  காமராஜர் அவருடைய அம்மாவிடம் நடந்து கொண்டதை அப்படித்தான் சொல்ல வேண்டும்.  நான் அப்படி அல்ல.  வேண்டியவர் வேண்டாதவர் எல்லாம் எனக்கு ஒன்றுதான்.  நன்றாக இருந்தால் பாராட்டுவேன்.  நன்றாக இல்லை என்றால் திட்டுவேன் என்று எழுதுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.  திட்ட மாட்டேன், அங்கிருந்து ஒதுங்கிப் … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more