ரசிகனின் கேள்வியும் முட்டாளின் பதிலும்…

கேள்வி: என்னைப் பொருத்தவரை, இளையராஜாவிடம் அந்த இளைஞர் அதுபோன்ற கேள்வியை எழுப்பியதே மிகப்பெரிய தவறு என்று தோன்றுகிறது. நாம் பொருட்படுத்த வேண்டாத விஷயம் இது என்றும் தோன்றுகிறது. இளையராஜாவிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை… நாளைக்கு முதல் அமைச்சரின் ப்ரஸ் மீட் நடக்கும். அப்போதும் இதே கேள்வியை எவரேனும் கேட்பார்களா? கணேஷ் அன்பு. முட்டாளின் பதில்: கணேஷ், பொது இடத்தில் ஒரு அந்நிய மனிதரைப் பார்த்து, அதிலும் ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு … Read more

முட்டாளின் கடைசிச் சந்தேகம்!

இன்னும் ஒரு விஷயத்தை விட்டு விட்டேன்.  ஒரு அரசியல்வாதி  பொதுக்கூட்டத்தில் கையை ஓங்கி அடிக்கப் பார்ப்பார்.  சமயங்களில் அடித்தே விடுவார்.  பத்திரிகையாளர் கூட்டத்திலும் நாக்கைத் துருத்துவார், மிரட்டுவார்.  இப்படி இப்படி.  அவரைப் பற்றி நான் இதுவரை ஏதாவது கட்டுரை எழுதியிருக்கிறேனா?  ஏனென்றால், எங்கள் ஊரில் சொல்வார்கள்… மது அருந்தியவரும் குழந்தையும் ஒன்று என்று.  அது போகட்டும்.  இப்போது என் சந்தேகம் எல்லாம் அந்த அரசியல்வாதியும் இளையராஜாவும் ஒன்றா? அவர் செய்வதை இவர் செய்யலாமா?    

முட்டாளின் வருத்தங்கள் தொடர்கின்றன…

முட்டாளின் கேள்விகள் தொடர்கின்றன.  மன்னியுங்கள்.  ஒரு நண்பர் என்னைக் கேட்டிருந்தார்.  உங்களிடமும் பலர் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும் போது நீங்களும்தான் கோபப்படுகிறீர்கள்.  இசைஞானி கோபப்பட்டால் மட்டும் தப்பா? கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னது?  வன்முறையில் ஈடுபடலாமா என்பதுதான் கேள்வி.  வன்முறையா?  அவர் என்ன நிருபரை அடிக்கவா செய்தார் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.   வசைச் சொல்லை நேரடியாக, முகத்துக்கு நேராகப் பிரயோகிப்பது மிகக் கடுமையான வன்முறை.  சொல்லுங்கள், அந்தச் செய்தியாளரால் தன் வாழ்நாள் முடியுமட்டும் … Read more

ஒரு முட்டாளின் வருத்தங்கள், கேள்விகள், சந்தேகங்கள்…

அவர் பெயர் Nick Ut.  1972 ஜூன் எட்டாம் தேதி அன்று அவர் வியட்நாமில் எடுத்த ஒரு புகைப்படம் வியட்நாம் போரின் அவலத்தை உலகத்துக்குத் தெரிவித்தது.  அந்தப் புகைப்படம்: குண்டு வெடித்ததால் தோலெல்லாம் பிய்ந்த நிலையில் நிர்வாணமாக ஓடி வருகிறாள் ஒன்பது வயது சிறுமி.   செய்தி சேகரிப்பவர்களின் வேலையே இதுதான். குண்டு வெடித்துக் கொண்டிருக்கும். கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். செய்தியாளனோ புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பான். அவனுக்காகச் செய்யவில்லை. இந்த விஷயத்தை அவன் உலகத்துக்குச் … Read more

சார்வாகன் காலமானார்

சார்வாகன் இன்று மாலை ஆறு மணிக்கு காலமாகிவிட்டார். சாரு வெளியில் இருப்பதால், அவர் சார்பாக நான் இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். ஆழ்ந்த வருத்தங்களுடன், ஸ்ரீராம்.   ***       சார்வாகன் நவம்பர் 21, 2015 இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி … Read more

தினமணி, அந்திமழை இணைப்புகள்

நிலவு தேயாத தேசம் – 8: http://andhimazhai.com/news/view/nilavu-8.html *** நிலவு தேயாத தேசம் – 9: http://andhimazhai.com/news/view/nilavu9.html *** பழுப்பு நிறப் பக்கங்கள், தி.ஜானகிராமன் – பகுதி 7: http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/13/%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7/article3174060.ece ***   லா.ச.ரா. பகுதி (1): http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/12/20/%E0%AE%B2%E0%AE%BE.%E0%AE%9A.%E0%AE%B0%E0%AE%BE.-1916-%E2%80%93-2007/article3185907.ece