ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100

மேற்கண்ட தலைப்பில் இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் தினமலர் சினிமா பக்கத்தில் எழுதுவேன்.  இன்று முதல் கட்டுரையின் முதல் பகுதி வந்துள்ளது.  நண்பர்கள் படிக்கவும்.  கட்டுரை விரிவான ஆய்வாக இராது.  300 வார்த்தைகளில் எந்த அளவுக்கு அறிமுகப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு செய்திருக்கிறேன்.  பொதுவாக உலக சினிமா என்றால் அது ஹாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கிறது.  பல சினிமா கலைஞர்களின் உலக சினிமா பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் ஹாலிவுட் சினிமா.  மனப்பாடமாகவே சொல்லி விடலாம்.  காட்ஃபாதர், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், … Read more

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 25 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 59, 60) கிடைக்கும். உயிர்மை புத்தகங்கள் நாதம் கீதம் அரங்கில் கிடைக்கும். இடம்: அரண்மனை வளாகம், தஞ்சாவூர் நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை – ஸ்ரீராம்  

ஒசூர் புத்தகக் கண்காட்சி

ஒசூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் – 12, 13) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 48) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: R.K. மஹால், சீனிவாசா திரையரங்கம் பின்புறம், E.B. அலுவலகம் அருகில், இராயக்கோட்டை சாலை, ஓசூர். – ஸ்ரீராம்

அரியலூர் புத்தகக் கண்காட்சி

அரியலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 94, 95) கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பேருந்து நிலையம் அருகில், அரியலூர். – ஸ்ரீராம்

இனிமேல் ஜாலி…

குருப் பெயர்ச்சி நடந்திருக்கிறதாம்.  இனிமே ஐயாவுக்கு ஜாலிதான்.  ஜோதிடர் ஆர்.கே. சதீஷ்குமார் சொல்கிறார்.  முகநூலில் படித்தேன். ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு … Read more

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்! – தினமலர் கட்டுரை

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ‘சாட்டிங்’கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, ‘வாடி, போடி’ என்று அழைக்க முடியும். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. ‘செய்து காண்பிக்கவா?’ என்றார். ஒரே மணி நேரத்தில், அந்தப் பெண்ணே இவரை, ‘வாடா, போடா’ என்று சொன்னாள். இவரும் அதற்கு ஏற்றாற்போல், ‘வாடி, போடி!’ ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்; … Read more