குருவும் சிஷ்யையும்… (குறுங்கதை)

இந்த ஒன்றரை ஆண்டுகளில் நேற்றுதான் முதல் முதலாக அவந்திகா வெளியே செல்கிறாள்.  சின்மயா நகரில் உள்ள அவளுடைய அம்மா வீட்டுக்கு.  மைலாப்பூரிலிருந்து தூரம்தான்.  டாக்ஸியில் போக மாட்டேன் என்று சொல்லி விட்டதால் நண்பர்கள் யாருடைய காராவது தேவை.  காரோட்டியுடன்.  ஆள் ஔரங்கசீப் மாதிரி ஒழுக்கசீலராக இருக்க வேண்டும்.  தண்ணி கிண்ணி அடித்துக் கொண்டு, நிறைய கேர்ள் ஃப்ரென்ஸெல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் – வேண்டாம், பெயரைச் சொல்லாமலேயே யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் – அந்த ஆள் தகுதி இழக்கிறார்.  சில நண்பர்கள் அவந்திகா எதிர்பார்க்கும் அளவு ஒழுக்க சீலர்கள்தான். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் பிஸி.  இன்னொரு விஷயம், ஒழுக்க சீலராக இருந்தாலும் அவரை நான் அடிக்கடி புகழ்ந்து எழுதியோ பேசியோ இருக்கக் கூடாது.  தகுதி இழப்புக்கு ஆளாகி விடுவார்.  கடைசியில் வசந்தனை அழைத்துச் சொன்னேன்.   வசந்தன்தான் ஒழுக்கத்திலும் நல்ல பேர் எடுத்தவர்.  நானும் அதிகமாகப் புகழ்ந்து எழுதியதில்லை.  பேசியதில்லை.  எதற்கும் ஒருத்தர் ரிஸர்வில் இருக்கட்டும் என்றுதான் வசந்தன் பெயரையே வீட்டில் அதிகமாக எடுப்பதில்லை. ஃபோனிலும் பேசுவதில்லை.  புகழ ஆரம்பித்தால் பிரச்சினையாகி விடுகிறது.  என்ன பிரச்சினை? புகழப்பட்ட ஆசாமி “டேய் ங்கோத்தா, நான் சொல்றதைக் கேளுடா, பாடு” என்ற ரீதியில் என்னிடம் பேசவும் பழகவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.  நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லலாம்.  சீனி அப்படி இல்லையேம்மா என்று சொன்னால், அதற்கு வேறு விதமான தர்க்கம் வைத்திருக்கிறாள்.  ”சீனி ஏன் ரமணர் மாதிரி வாழவில்லை?”  ங்கொய்யால…  போட்டுத் தாக்கு.  அதோடு பேச்சு வார்த்தை முறிந்து விடும்.  நான் எழுத்தில் உட்கார்ந்து விடுவேன்.

அப்படியாகக் கடைசியில் எந்த விதத்திலும் தகுதி இழப்பு பெறாத வசந்தனை அழைத்து ஒரு மூன்று மணி நேரம் காரையும் காரோட்டியையும் அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டு, அவரும் வந்து வேலையும் சுமுகமாக முடிந்து விட்டது.  சரியாக மூன்றுக்குப் போய் ஆறு மணிக்குத்  திரும்பி விட்டாள். 

ஏழு மணி அளவில் என்னிடம் வந்து “வசந்தனுக்கு நன்றி சொல்லி விடு சாரு” என்று சொன்னாள்.

அப்போது நான் படு மும்முரமாக ஔரங்கசீப்பில் மூழ்கியிருந்தேன்.  நாள் பூராவும் எழுதிய ஒரு அத்தியாயத்தை சீனி கொஞ்சமும் கருணையின்றி ”வேண்டாம், தூக்கி விடுங்கள்” என்றார்.  எனக்குமே அப்படித் தோன்றியதால் தூக்கி விட்டு வேறு திசையில் யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.  பொதுவாக சீனி சொன்னால் – இலக்கிய விவகாரங்களில் மட்டும் – அதற்கு நேர் மாறாகச் செய்யும் நான் இந்த ஔரங்கசீப் விஷயத்தில் அவர் யோசனைகளை எடுத்துக் கொள்கிறேன்.  அந்த நேரத்தில்தான் வந்து நன்றி பற்றிய உத்தரவை இட்டாள் அவந்திகா. 

“முடியாது” என்றேன்.  என் தொனி வழக்கத்துக்கு மாறாகக் கடுமையாக இருந்தது எனக்கே தெரிந்தது. 

“அப்படியானால் வசந்தன் நம்பரைக் கொடு; நானே நன்றி சொல்லி விடுகிறேன்.  அதுதான் மரியாதை.”

”தர முடியாது.”  தொனி முன்னை விட அதிகக் கடுமையை எட்டியது. 

“இதெல்லாம் என்ன மாதிரி நட்பு?  ஆமாம், ஏன் நீ அவருக்கு நன்றி சொல்ல மறுக்கிறாய்?”

”சிஷ்யனுக்கு குரு நன்றி சொல்ல மாட்டார்.”

”ஓ…ஹோ…  நல்லவேளை, நான் உனக்கு சிஷ்யையாகவும் நீ எனக்கு குருவாகவும் இல்லை.”

’இருந்திருந்தால் கன்னம் பழுத்திருக்கும்’ என்று நினைத்தபடி மீண்டும் எழுத்தில் அமர்ந்தேன். 

***

சந்தா/நன்கொடை அனுப்ப ஞாபகப்படுத்துகிறேன்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai