சில குறிப்புகள்

ந. வெங்கடசுப்ரமணியனின் மரம் பற்றிய குறிப்பை இங்கே பகிர்ந்ததற்கு மிகவும் நெகிழ்ச்சியடைந்து எழுதியிருந்தார். மனிதர்களை நேசிக்கவும் எழுதவும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் மரங்களையும் மரத்தில் வாழும் ஜீவராசிகளையும் ரசிப்பதற்கும் போற்றுவதற்கும் யார் இருக்கிறார்கள். மரத்தையும் பிராணிகளையும் நேசிப்பவரை நான் நேசிக்கிறேன்…

பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் அனுப்பி வைக்கலாம். எனக்கு எழுதினால் விலாசம் அனுப்புகிறேன். மாதம் தோறும் பூனை உணவு அனுப்பும் நண்பருக்கு உடல் நலமில்லாமல் போய் விட்டது. அதனால் எழுதுகிறேன். இப்போது bynge.in இல் எழுதுவதால் ப்ளாகில் அதிகம் எழுத முடிவதில்லை. ப்ளாகில் அதிகம் எழுதாததால் சந்தா/நன்கொடையும் முன்னைப் போல் வருவதில்லை.

charu.nivedita.india@gmail.com