யார் அந்த பப்ளிஷர்?

கேள்வி: சாரு, யார் அந்த பப்ளிஷர் உங்களுக்கு சாபம் விட்டது? நீங்கள் அது பற்றிச் சொல்லவே இல்லையே?

வினித், கும்பகோணம்.

பதில்: ஏங்க வினித், என் உள்வட்டத்தில் இருந்து கொண்டே இந்தக் குசும்பு? அவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் விட்ட சாபம் இப்போதுதான் expire ஆகும்போல் தெரிகிறது. இப்போது அவர் பெயரை வேறு கேட்டு, யாராவது என் நலம்விரும்பி அவரிடம் போய் அதைச் சொல்லி, அந்த சாபத்தை அவர் மீண்டும் உயிர்ப்பிக்கவா? வாயைக் கிளறாதீர்கள். ஔரங்கசீப் படிக்கிறீர்களா இல்லையா?

சாரு