ஆசீர்வாதம் (குட்டிக் கதை)

நான் கர்ம வினையை நம்புபவன்.  கர்மாவுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான சோதனை, நிரூபணம் எதுவும் கிடையாது.  பெரியோர் சொல்வதையும் சில அனுபவங்களையும் வைத்து நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் என் பழைய நண்பர் ஒருவர் குடித்த குடிக்கு எப்போதோ மேலே போயிருக்க வேண்டும்.  அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். யாரும் அஞ்ச வேண்டாம்,  என் வயது 85 என்று.  அவருக்கு சோதிடம் தெரியும்.  நான் அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது பிரிந்து விடுவீர்கள் என்றார்.  பரிகாரமும் சொன்னார்.  அடப் போய்யா, மயிரே போச்சு என்று சொல்லி விட்டேன்.  நான் சோதிடம் பார்த்துக் கொள்வேன்.  பரிகாரம் சொன்னால் செய்ய மாட்டேன்.  கூடிய விரைவிலேயே அவர் வாக்கு பலித்தது.  அவர் ஆயுளை அவர் சொன்னபோது அவர் வயது 50 இருக்கும்.  இப்போது அவர் வயது 75.  இன்னும் 20 வருடம் இருப்பார்.  இன்னமும் குடிக்கிறார்.  சிகரெட்டும் புகைக்கிறார்.  உடம்பில் ஒரு வியாதி இல்லை. 

நான் ஒரு வரம் வாங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  என்ன வரம்?  ஒருவர் வயது 65 என்று வைத்துக் கொள்வோம். எழுத்தாளர். அவர் ஒரு மகாத்மா.  வள்ளலார்.  என்ன இது, ஆக்ஸிமொரான் என்று பார்க்கிறீர்களா?  லட்சத்தில் இப்படி சில ஆக்ஸிமொரான்கள் நிகழும்.  தன் குழந்தைகளைக் கூட வைததில்லை.  சக எழுத்தாளர்களைத் திட்டியதே இல்லை.  அதிர்ந்து கூடப் பேச மாட்டார்.  கிட்டத்தில் போய்க் கேட்டால்தான் கேட்கும்.  அத்தனை மென்மை.  அவர் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார்.  எப்படித் தெரியுமா?  என் எழுத்தை அல்ல.  என்னை.  அதுவும் எப்படி?  1985இல் அவர் என் வீட்டுக்கு வந்தார்.  என் ஐந்து வயது மகளின் காதணியைத் திருடிக் கொண்டு போய் விட்டார். 

இத்தனைக்கும் அந்த எழுத்தாளரும் நானும் சில ஆண்டுகள் ஒரே தட்டில் உணவு அருந்தியிருப்போம்.

இன்னொரு எழுத்தாளர் என் பொறி கலங்கும் அளவுக்கு என் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.  நேநோ தொகுப்பில் காப்பிரைட் பக்கத்தை ஃப்ரெஞ்சில் போட்டு விட்டேன் என்பதுதான் காரணம்.  யார் என்று சொன்னால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள்.  பொய் சொல்கிறேன் என்பீர்கள்.  அடித்து விட்டு ஓடி விட்டார்.  நான் திருப்பித் தாக்குவேன் என்று ஒரு வாரம் தலைமறைவாக இருந்ததாக பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து சிரித்துக் கொண்டே சொன்னார்.  அசல் வள்ளலார்.  அடித்த போது அவர் குடித்திருக்கவில்லை என்பது முக்கியம்.

இன்னொரு எழுத்தாளர்.  அவருடைய 16 வயது மகளை “இவள் உருப்படவே மாட்டாள்” என்று நான் கட்டுரை எழுதியதாக அவருடைய நண்பர் பரமன் சித்ராவிடம் சொல்லியிருக்கிறார். ”நானே அந்தக் கட்டுரையைப் படித்திருக்கிறேன் சித்ரா.”  இது பரமனின் வாக்கு.  இதற்கு சித்ரா என்ன பதில் சொல்ல முடியும்?  சித்ராவுக்கு சாரு கடவுள் மாதிரி.  சித்ராவுக்கு சாருவை 15 ஆண்டுகளாகத் தெரியும். உடனே சித்ரா பரமனிடம் “பழைய சாரு பற்றி எனக்குத் தெரியாது பரமன்.  எனக்குத் தெரிந்த சாரு அப்படி இல்லை.  நல்லவர்” என்கிறார். 

சித்ரா இதை என்னிடம் சொல்லி, “நீங்களாப்பா அப்படி எழுதினீங்க? நீங்க எழுதியிருக்க மாட்டீங்கன்னு தெரியும்.  இருந்தாலும் அவர் படிச்சதா சொல்றாரே?” என்றார். 

”இத்தனை நாள் பழகிட்டு நீ இப்படிக் கேட்பதே எனக்கு அவமானம்.”

”தெரியும்ப்பா.  இருந்தாலும் கேட்டுக்கிறேன்” என்று சொல்லி, தான் பரமனிடம் சொன்னதைச் சொன்னார். 

”அதுவுமே எனக்கு அவமானம்தாம்மா.  ஒரு சிறு குழந்தையை சபிக்கும் அளவு மிருகமா நான்?  என் வாழ்வில் ஒருபோதும் அப்படி நான் இருந்ததில்லை.”

”சரி, அப்படியானால் சாரு, இப்படிச் செய்யுங்கள்.  அந்தப் பெண் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறாள்.  உங்களையும் படிக்கிறாள்.  அவளிடம் நீங்களே கூப்பிட்டுப் பேசி விடுங்கள், நான் அப்படியெல்லாம் எழுதவில்லை கோந்தே என்று.  என்ன?” என்றார். 

“வேறு ஏதாவது பேசுவோமே சித்ரா?” என்று பேச்சை மாற்றி விட்டேன். 

இன்னொரு பெண்ணுக்குக் கல்யாணமே நடக்க விடாமல் ஏதோ அவதூறாக எழுதியிருக்கிறேன்.  குடும்பமே என்னை இருபது ஆண்டுகளாக சபித்திருக்கிறது.  அது என்ன பஞ்சாயத்து என்று நான் சொல்ல மாட்டேன்.  நான் அந்தப் பெண் பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை என்பதுதான் சத்தியம். 

இப்படியாக ஏதேதோ சாபங்கள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன.  குழந்தைச் சாபம்.  பெண் சாபம்.  வள்ளலார் சாபம். 

எனக்கு சாபம் கொடுத்தவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.  அவர்களின் பாவங்களை என் மீது இறக்கி வைக்கிறார்கள்.  அவர்களை நான் ஆசீர்வதிக்கிறேன்.  இன்று காலை ஐந்திலிருந்து ஆறு மணி வரை தியானத்தில் இருந்தபோது இந்த என் ஆசீர்வாதம் மனதில் தங்கியிருந்தது.

உங்கள் மாலைகளை வாங்கிக் கொள்ள சிலர் இருக்கும்போது உங்கள் வருத்தங்களை வாங்கிக் கொள்ளவும் ஒருத்தர் வேண்டும் இல்லையா?  அதற்காகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்று உணர்ந்து கொள்கிறேன்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai