ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா என்ற என் மொத்தமான கவிதைத் தொகுதி இந்தப் புத்தக விழாவில் வந்து விடும்.

எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் எடிட் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளவன் நான். எழுத்தாளரே எடிட் செய்யக் கூடாது. எழுத்தாளரை நன்கு அறிந்த ஒருவர் செய்ய வேண்டும். தமிழில் நூறு புத்தகங்களே விற்பதால் யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நான் அப்படிச் செய்வதில்லை.

ஸ்மாஷன் தாராவை எடிட் செய்து கொடுக்க என் நீண்ட கால நண்பர் ஆத்மார்த்தியைக் கேட்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். நேற்று இரவே படித்து விட்டு இன்று காலை அழைத்தார்.

இப்படி ஒரு பாராட்டை வாழ்க்கையில் கேட்டதில்லை.

நன்றி ஆத்மார்த்தி.