சொற்கடிகை 14: தியானம் கற்றுக் கொள்வது எப்படி?

அது ஒரு பெரிய இடம். ஒய்.எம்.சி.ஏ. மைதானம். சுற்றி வர புத்தகங்களாக இருக்கும். புத்தகங்களுக்கு நடுவே தியானம் செய்வது நம் ஜக்கி கூட முயற்சிக்காதது. ராம்ஜி, காயத்ரி, வித்யா மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். காயத்ரிக்குக் கொஞ்சம் தியானம் வராது. லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள் அமர்ந்து அமைதியாக தியானம் செய்யும் படி என்னிடம் சமிக்ஞை செய்தாள். பக்கத்து வீட்டில் வேடியப்பனும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

மூன்றரையிலிருந்து ஏழரை வரை மகா தியானம் செய்து விட்டுக் கிளம்பினேன். மனசே லேசாகி விட்டது.

இன்றைய தியான வகுப்பு காலை பதினோரு மணிக்கே தொடங்கி விட்டாலும் நான் நாலு மணியிலிருந்து ஏழரை வரை கலந்து கொள்வேன். தாங்களும் வந்து தியானம் கற்கலாம்.

நல்லதொரு ஆன்மீக அனுபவம்.