இன்னொரு கவிதை: மகிழ்ச்சி

நீ நினைப்பதுபோல்

நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாள்

மகிழ்ச்சி என்றேன்

பிறிதொரு நாள்

இவ்வுலகில் நீதானென்

ஒரே மகிழ்ச்சி

உன்னை ஒருக்கணமும்

பிரிந்திருக்க சம்மதியேன்

என்றாள்

மகிழ்ச்சி என்றேன்

இப்போது

மகிழ்ச்சி குறித்து நானும்

முதல்முறையாக

யோசிக்க

ஆரம்பித்

திருக்கிறேன்