பாண்டிச்சேரி சந்திப்பு: அராத்து

சாரு நிவேதிதா புதிய இளம் வாசகர்களை சந்திக்க விரும்புகிறார். இளம் என்றால் “மனதில் இளம் “.

பல புதிய வாசக நண்பர்களுக்குத் தயக்கமாக இருக்கும் . பல சீனியர் ஆசாமிகள் இருப்பார்கள், சாரு வேறு கோபக்காரர் என்ற பிம்பம். அதனால் இந்த முறை மூத்த முதிய வாசகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.

நானும் வினீத்தும் கலந்துகொண்டாலும் , ஆர்கனைஸ் செய்யும் வேலைகளில் மட்டுமே ஈடுபடுவோம். முற்றிலும் புதிய வாசகர்கள் மட்டும் சாருவுடன் கலந்துரையாடலாம்.

சாரு நிவேதிதாவின் புத்தகங்களைப் படித்து விட்டு வருபவர்களுக்கு உரையாடல் சுவாரசியமாக இருக்கும். செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை.

இடம் பாண்டிச்சேரி ஆரோவில். எப்படி கலந்து கொள்வது ?அப்படியே வந்து கலந்து கொள்ள வேண்டியதுதான். எந்த இடம் ? மேப் லொகேஷன் ?Vinith Vijay Prakash தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு இடம் பற்றிய தகவல்கள் அளிப்பார். ஆச்சரியமாக இந்த முறை கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த பலரும் , ஏதேனும் வேலை இருக்கிறதா ? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வினீத்திடம் கேட்டிருக்கிறார்கள். மிக நல்ல விஷயம் . இந்த முறை எல்லாமே DIY தான். பெரிய தோட்டம் இருக்கிறது , சின்ன கிச்சன் இருக்கிறது. நம் கற்பனைத் திறனிற்கேற்ப ஜமாய்க்கலாம்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாய் ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார். சாருவின் நீண்ட நாள் வாசகராம். நன்றாக சமைப்பாராம். அவரைக் காணத்தான் நான் படு ஆவலாக இருக்கிறேன். வினித் தொலைபேசி எண் 84384 81241