நான்

நான்

நின்ற நிலையிலும்

ஓடிக் கொண்டிருக்கும் புரவி

தூளியில் இருக்கும் போதும்

விரைந்து கொண்டிருக்கும் அம்பு

பறக்காமலிருக்கும்போதும்

பறந்து கொண்டிருக்கும் பறவை

பெய்யாமல் இருக்கும்போதும்

பெய்து கொண்டிருக்கும் மழை

தணிந்து கிடக்கும் போதும்

எரிந்து கொண்டிருக்கும் தழல்

பேசிக் கொண்டிருக்கும்போதும்

உள்ளுறைந்து கிடக்கும் மௌனம்

அமைதியாய் சென்று கொண்டிருந்தாலும்

ஆனையை விழுங்கும் சுழல்

எழுதாமல் இருக்கும்போதும்

எழுதிக் கொண்டிருக்கும் கவி