ஏன் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறீர்கள்?

எனக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது தொடர்பாக ஜெயமோகனின் வலைத்தளத்தில் தினமும் அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரமாகின்றன. என் வாசகர்கள் பலரிடமும் அவற்றைப் படிக்கிறீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் கூட படிப்பதாகத் தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை சாருவைப் படிக்காதவர்கள், இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கியிருப்பவர்கள், இதுவரை என் மீது வெறுப்பாக இருந்தவர்கள் என்று பல சாரார் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் கூட நீங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியம்.

இதெல்லாம் ஒரு கொண்டாட்டம்தான் இல்லையா? ஏன் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறீர்கள்?

சாரு, கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)