இன்று மாலை ஃபேஸ்புக் லைவில்…

இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உரையாற்ற இருக்கிறேன். இன்று காலை பதினோரு மணியிலிருந்தே ஆரோவில்லில் சிறுகதைப் பட்டறை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பரோல் கிடைக்கவில்லை. அதனால்தான் ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் பேசுகிறேன். ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, இராசேந்திர சோழனின் இசைவு, சு. வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி ஆகிய மூன்று சிறுகதைகள் பற்றிய பட்டறை. என் உரை இம்மூன்று சிறுகதைகள் பற்றியும் பொதுவாக எழுத்தும் பாலியலும் என்ற பொருள் பற்றியும் அமையும். இன்றே பேடியோ குறுநாவலை முடிக்க நினைத்திருந்தேன். இடையில் இந்தப் பணி குறுக்கிடுகிறது. நாளையாவது குறுநாவலை முடிக்க முயற்சிக்கிறேன். காதலும் காமமும் வன்முறையும் கலந்த ஒரு குறுநாவல் பேடியோ. நான் எதையும் திட்டமிடவில்லை. அதுவாக நிகழ்ந்தது. இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் சந்திப்போம்.