பெட்டியோ நாவல் தயார்

பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். முதல் ட்ராஃப்ட்டில் 105 பக்கம். நான்கு நாள்களில் எழுதினேன். இத்தனை வேகத்தில் என் வாழ்வில் இதுவரை எழுதியதில்லை. ஸீரோ டிகிரியில் புழங்கிய மொழி நடை இனி எனக்கு லபிக்காது, அந்தக் காலம் வேறு, அப்போதிருந்த மனோலயம் வேறு என்றே நினைத்திருந்தேன். பெட்டியோ நாவலில் ஒரு முழு அத்தியாயம் ஸீரோ டிகிரியையும் விட கனமாக வந்திருக்கிறது. என் எழுத்து எளிமையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த அத்தியாயம் மட்டும் வேறு மாதிரி. பிழை திருத்தம் செய்ததும் சீனிக்கும் இன்னொரு இலங்கை நண்பருக்கும் அனுப்ப வேண்டும். இன்று அனுப்ப முடியும் என நினைக்கிறேன். நாவல் என்.எஃப்.டி.யில் வெளிவருவதற்குள் இன்னும் சில பக்கங்களைச் சேர்க்கக் கூடும்.