14. என் கத்தி கடவுளையும் கூறு போடும்…

அராத்துவின் விளக்கம் படித்தேன்.  உறங்கச் செல்வதற்கு முன் அதற்கு ஒரு பதில். 

ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இந்த விவாதத்தினால் வாசகர்களுக்குப் பயன் உண்டாகுமே தவிர அராத்துவுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.  அவரைப் பொருத்தவரை இது வெட்டிவேலையாகவே இருக்கும்.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.  எனக்கு, மொழி உடல்.  உள்ளடக்கம் ஆன்மா.  ஆன்மா மட்டும் இருந்தால் அது ஆவி.  இரண்டுமே எனக்கு முக்கியம்.  இதற்கிடையில் நான் உடலை ஆராதிப்பவன் வேறு. 

ஒரு அழகிப் போட்டிக்கு நடுவராகச் சென்ற போது அந்தப் பெண்களின் குதிகால்களைத்தான் முதலில் கவனித்தேன்.  பல பெண்களுக்கு அங்கே வெடிப்பு இருந்த்து.  எத்தனை சோகம்.  அவர்கள் அழகிப் போட்டிக்கே லாயக்கில்லாதவர்கள்.  அந்த வெடிப்பை ஒரு மாத்த்தில் போக்கலாம்.  இதமான வெந்நீரில் தினமும் பத்து நிமிடம் வைத்திருந்து pumice stone போட்டுத் தேய்த்து கடைசியில் க்ரீம் பூசினால் ஒரே மாத்த்தில் பட்டுப் போல் ஆகி விடும்.  அதனால்தான் என் குதிகால்கள் சிசுவின் கன்னம் போல் இருக்கும் என்றேன்.

எண்பது தொண்ணூறு ஆண்டுகளில் அழியப் போகும் இந்த உடம்புக்கே இத்தனை கவனிப்பு என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழப் போகும் இலக்கியத்தின் சரீரத்தை எப்படியெல்லாம் கவனிக்க வேண்டும்?  அதனால்தான் சொன்னேன், ஹூலியோ கொர்த்தஸாரின் மீட்டிங் என்ற கதையில் வரும் இசை சம்பந்தப்பட்ட ஒரு சொல்லுக்காக ஒரு மாதம் காத்திருந்தேன் என்று.

அராத்துவின் கருத்து:

”இதை மட்டும் சொல்லிவிடுகிறேன். இலக்கியத்துக்கும் மொழிக்கும் ஆழமான தொடர்பிருந்தாலும், நல்ல மொழி வளம், மொழி ஞானம், மொழிப் பயன்பாடு  மட்டுமே இலக்கியமாக முடியாது.

இலக்கியம் என்பது வேறு. மொழி ஒரு டூல், சாரி, கருவி மட்டுமே சாரு.”

எனக்கு மொழி கருவி அல்ல.  ஏனென்றால், நான் என்னுடைய மொழியைக் கொண்டு யாருக்கும் எதையும் சொல்ல விரும்பவில்லை.  நான் எனக்காக மட்டுமே எழுதிக்கொள்கிறேன்.  அதை மானுட குலத்துக்கும் வழங்குவதன் காரணம், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நல்லெண்ணம்தான்.  மற்றபடி நான் எழுதும்போது யாரையும் நினைத்து, யாருக்கும் எதையும் கடத்த நினைத்து எழுதுவதே இல்லை.  அதனால்தான் நான் எப்போதுமே சொல்லி வருகிறேன், ஒரு பறவை பறப்பது போலே நான் எழுதுகிறேன் என்று.  பறவைக்கு எது பற்றியும் கவலை இருப்பதில்லை. 

ஆனால் நான் ஒரு perfectionist.  எதைச் செய்தாலும் அதை மிகச் சிறப்பாகவே செய்ய முயல்வேன்.  நான் எழுதுகிறேன்.  என் தொழில் எழுத்து.  எனவே என் கத்தி தெய்வமே வந்தாலும் அத்தெய்வத்தை வெட்டித் துண்டு போடுவதாக இருக்க வேண்டும்.  அந்தக் கத்தியைச் செய்வதற்காக நான் காடு மலையெல்லாம் தாண்டுவேன்.  காற்றில் பறப்பேன்.  ஆகாயத்திலும் தேடுவேன்.  தெய்வத்தைத் துண்டு போடும் உலோகம் எனக்குக் கிடைத்தாக வேண்டும்.  அந்த உலோகம்தான் என் மொழி. 

ஆனால் மொழி எனக்குக் கருவி அல்ல.  அது என் உடல்.  என் உயிரை ஆயிரமாயிரம் ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ளப் போகும் என் வணக்கத்துக்குரிய உடல்.  மனித உடல் அழிந்து விடும்.  என் மொழி அழியாது.  அதனாலே என் மொழியை வணங்குகிறேன்.  ஆராதிக்கிறேன்.  சமயங்களில் சிதைக்கவும் செய்கிறேன்.  நான் அகோரி என்பதால் சிதைப்பதும் ஆராதனையில் அடங்கியதுதான்.

***

சந்தா இதுவரை அனுப்பாதவர்களை அனுப்பி வைக்குபடி கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேல் அனுப்புவது உங்கள் விருப்பம். ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai