பச்சை மிளகாயை முன்வைத்து ஒரு erotic கவிதை

1

எல்லாம் ஒரு திட்டத்தில் நடக்கிறது
என்கிறான் பெருங்கவிஞன்
’ஒரு பறவை வீழ்ந்தாலும்
அதில் திட்டமுண்டு
இப்போது நடக்கும் என்றால் நடக்காது
இப்போது நடக்காது என்றால் நடக்கும்

2

அப்படித்தான்
நடந்தது அந்தச் சந்திப்பு
ஈருடல் ஓருயிர் ஆனது
ரோமியோவுக்கு முன்பே ஒரு காதலி இருந்தாள்
ஜூலியட்டைக் கண்டதும் காணாமல் போனது
பழைய காதல்
இதுவும் அப்படியே நடந்தது

3

ஒவ்வொருவருக்கும்
ஒரு பழக்கம்
எனக்குப் பச்சை மிளகாய்
ஒன்றுக்கு இரண்டு
கடித்து உண்டால்தான்
உணவு இறங்கும்

4

அவளைக் கண்டதும்
பச்சை மிளகாயைத் துறந்தேன்
காரணமா?
உடையவர் சொன்னார்
’பிறர் வலியைத்
தன் வலியாய் உணர்பவனே
வைணவன்’