காதல்: ஒரு உரையாடல்

உன்மத்த நிலையில் எழுதுகிறாய்
இப்படி ஒரு காதல் வாய்க்குமா
எனக்கு என்றான் நண்பன்

காதலாவது கத்தரிக்காயாவது
பச்சை சுயநலம்
சூறையில் அகப்பட்ட சருகாய்
அலைவுற்ற எனக்கு
இவளைப் போல் தந்தவர்
யாருமிலர்
அதனாலே இத்தனைப் பிரியம்
என்றேன்