ரோஜாவின் பெயர் நாவலில் நடந்த மோசடி பற்றி எழுதினேன். உடனே மோசடியில் ஈடுபட்ட நபர் எழுதுகிறார், “யோவ், உன் புத்தகங்களைப் பதிப்பிக்கும் ராம்ஜியே எனக்கு ஃபோன் பண்ணி உங்கள் மொழிபெயர்ப்புகளையும், மற்ற புனைகதைகளையும் கேட்கிறார், அப்புறம் என்னய்யா?”
கடைசியில்தான் தெரிகிறது, ராம்ஜி ஃபோன் பண்ணியது இந்த மோசடி வேலை வெளியே வராததற்கு முன்பு. ராம்ஜி ஃபோன் பண்ணின போது ரோஜாவின் பெயரே வந்திருக்கவில்லை.
இப்போது புரிகிறதா, கிரிமினல் மூளை எப்படி வேலை செய்யும் என்று?