எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்

நடைப்பயிற்சியில்ஒருகாலத்தில் துணையாயிருந்தஇசை இன்று.அலுத்துவிட்டது. ஒரு நண்பனை அழைத்தேன்.“இப்போதுதான் பாஸ்டனிலிருந்து வந்தேன்.இது இரவா பகலாஎன்றே தெரியவில்லை.பிறகு பேசலாமா?”என்றான். இன்னொருவனை அழைத்தேன்.“குடித்துக் குடித்துஉணவுக்குழாய் கெட்டுப்போய்படுக்கையில் கிடக்கிறார்உங்கள் நண்பர்”என்றாள் அவன் மனைவி.அழாமல் இருக்க முயற்சிப்பதுகுரலில் தெரிந்தது மற்றொரு நண்பன்:நாற்பத்தைந்து வயதில்மனைவி செக்ஸை நிறுத்திவிட்டாள்மூன்று வருடமாகதினமும் மூன்று முறைசுயமைதுனத்தில்ஓடுகிறது வாழ்க்கை என்று புலம்பினான் ஒருகாலத்தில்“காலையில் உன்னோடு பேசினால்நாள் முழுக்க உற்சாகம்,”என்றவள்,இப்போது“காலையில் பேசினால்மன உளைச்சல்.மாலையில் பேசலாமா?”என்கிறாள். இன்னொரு தோழிக்குஇரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.பார்த்தாளாஎன்றே தெரியவில்லை.நீலக்கோடு தெரிந்தால்பெரிய அசௌகரியம்என்றாள். எது குறித்தும்புகாரில்லைஎல்லோரும்இன்புற்றிருக்க வேண்டும்.

How can one hold back one’s tears?

இதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. காமரூப கதைகள் என்ற என் நாவல் பற்றி ஏன் யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அதில் மனுஷ்ய புத்திரன் நான்கு பெயர்களில் வெவ்வேறு பாத்திரங்களாக வருகிறார். மனோஜும் கூட. பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன. நாங்கள் மூவரும் சேர்ந்து அடிக்காத லூட்டி இல்லை. குறிப்பாக நானும் மனோஜும். காமரூப கதைகள் நாவலில் வசந்த் குஞ்ஜ் என்று ஒரு அத்தியாயம் வரும். அதை யாராலும் மறக்க … Read more

Self flagellation

ஜோடிப்புறா நாவல் குறித்து ரத்தக் கண்ணீர் எம்மார் ராதாவைப் போல் கதறிக் கதறி எழுதியிருந்தேன் இல்லையா?  மூன்று பேர் வாங்கி விட்டார்கள்.  அதைக் கேட்டு ஆன்மா இன்புற்றது.   ராஸ லீலா பதிப்பகம்.  புதிய பதிப்பகம்.  மிகச் சிறப்பான முறையில், ஈடு இணை இல்லாத வகையில் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராஸ லீலா பதிப்பகத்தில் பணிகள் நடக்கின்றன.  ஆனால் கொள்வார் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தேன்.  என் அத்யந்த நண்பர் ஒருமுறை சொன்னார், எக்காரணம் … Read more

என் கதை

இப்போது மொழி என்ற கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கட்டுரை இங்கே: என்னுடைய எழுத்து (அது நாவலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி) எப்போதுமே பொதுக்கருத்துக்கு எதிராக இருந்து வருவதால் (அப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை) ஆரம்பத்திலிருந்தே அதைப் பிரசுரிப்பதில் பெரும் சிரமங்களையும் பிரச்சினைகளுயுமே எதிர்கொண்டு வருகிறேன்.  எண்பதுகளில் நான் தில்லியில் இருந்த போது சுந்தர ராமசாமியின் ’ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்கு ஒரு விமர்சனக் கட்டுரை … Read more

இது ஒரு சமூக அவலம்!

ஒரு நெருங்கிய நண்பர்.  வசதியானவர்.  ஜோடிப்புறா பிடிஎஃப் அனுப்பவா என்று கேட்டேன்.  பதில் இல்லை.  பிடிஎஃப்-இல் வாங்கினால் ஒரு ஐயாயிரம் கிடைக்குமே என்று ஆர்வப்பட்டேன்.  தனவந்தரின் பண உதவி மார்ச்சிலிருந்து நின்று போனதால் பணம் என்ற விஷயம் இதுவரையில் இல்லாமல் முதல் முறையாக என் சிந்தனையில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது.  நெருங்கிய நண்பர் பதில் அனுப்பாமல் போனதோடு அந்த விஷயத்தை மறந்து விட்டேன். ஜோடிப்புறா அச்சு நூலாக வந்தது.  எண்பது பிரதிகள் விற்றது.  அந்த எண்பது என்ற … Read more