சலுகை விலையில் அடியேனின் புத்தகங்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து பின்வரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது: வாசகர்களின் ஞாபக சக்தி அபாரமானது. “நீங்கள் உங்கள் தளத்தில் தள்ளுபடி அளித்து ஒரு வருடம் ஆகிவிட்டதே!” என்று ஒருவர் நினைவூட்டினார். “இல்லை, அவ்வளவு நாள் ஆகவில்லை” என்றேன். “சரி, போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். பார்த்தபோது, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது. அதனால், இன்று முதல் இம்மாதம் முடியும் வரை நீங்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை பற்றி அதிகமானோர் அறிந்து … Read more

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்

இந்தப் புத்தகம் இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும். அந்த நாட்குறிப்புகளிலிருந்து ஒரு நாள்: ஜூன் 8, 2020 இந்தத் தொடர் முடிந்து விட்டதாக நினைத்தேன்.  ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது.  என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று.  ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள்.  மூர்க்கன், முரடன் இப்படியான பல பட்டங்கள் என் மீது உண்டு.  என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் … Read more

ஏழைச் சாமி

1. கண்ணாயிரம் பெருமாள் சமீபத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார்.  பெருமாளின் நண்பர் ஒருவர் பிராணிநல ஆர்வலர்.  அவர் வீட்டில் ஒரு முயல் வளர்க்கிறார்.  அது தவிர தெருப் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடுவது நண்பரின் வழக்கம்.  அப்படி அவர் தெருவில் வளரும் பூனைகளில் ஒன்று டாஃபி.  பெண் பூனை.  கிடைத்த போது சாப்பிடுவதும், இனவிருத்தியில் ஈடுபடுவதும், குட்டிகளைப் போட்டு அவற்றைக் கொசுக்கள், நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதுமாக இருந்த டாஃபிக்கு ஒருநாள் வயிறு வீங்கியிருந்ததைப் பார்த்து மிருக … Read more

மொழி

இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவர இருக்கும் மற்றொரு நூல் மொழி. அதன் அட்டை கீழே. என்னோடு இருப்பது டெட்டி. புகைப்படம் பிரபு காளிதாஸ்

உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்

மேற்கண்ட தலைப்பில் என்னுடைய அடுத்த புத்தகம் வெளிவருகிறது. ராஸலீலா பதிப்பகம். அந்த நூலுக்காக நிர்குண் வரைந்த சித்திரம் கீழே:

அலாரம்

அவந்திகாவுடன் இருந்தால் எல்லாம் ராணுவ ஒழுங்குடன் நடந்தேறும். இரவு பதினோரு மணிக்கு உறங்கச் செல்வேன்.  காலை ஐந்தரைக்கு எழுந்து கொள்வேன்.  இது ஒருநாள் கூட தவறாமல் செவ்வனே நடக்கும். ஆனால் அவந்திகா ஊரில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு கொஞ்சம் கெடும். சில தினங்களில் அதிகாலை வரை வேலை செய்வேன்.  அதில்தான் ஒரு சிக்கல் இருக்கிறது.  வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் சரியாக ஒன்பதரைக்கு வருவார்.  அதனால் நம் விருப்பப்படி ஏழு மணி நேரமெல்லாம் தூங்க முடியாது. எப்போது … Read more