எழுத்து, படிப்பு…
என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது. அதுவாக வரவில்லை. கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள். இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள். நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன். 14 மாதங்கள் முடிந்து விட்டன. கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது. எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது. பெல்ட் … Read more