எழுத்து, படிப்பு…

என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது.  அதுவாக வரவில்லை.  கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள்.  இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன்.  இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள்.  நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன்.  14 மாதங்கள் முடிந்து விட்டன.  கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது.  எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது.  பெல்ட் … Read more

புதிய தஞ்சை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்…

எனக்கு ஜாதி மதம் இனம் தேசம் என்று எந்த அடையாளமும் இல்லை என்பதை நீங்கள் நம்பினால்தான் மேற்கொண்டு நான் எழுதுவதில் உங்களுக்கு ஈடுபாடு செல்லும்.  என் தாய்மொழி தமிழ் என்றாலும் இந்த உலகிலேயே அரபியைப் போல் ஒரு அழகான மொழி இல்லை என்பது என் கருத்து.  தமிழின் சிறப்பு அதன் புராதனத் தன்மையும், சங்கமும், அகத்தியமும், தொல்காப்பியமும், எல்லாமும்.  அதே சிறப்புகள் சம்ஸ்கிருதத்துக்கும் உண்டு.  ஆனால் கூடுதலாக தமிழ் இன்றும் மக்களின் மொழியாகவும் இருக்கிறது.   சம்ஸ்கிருதத்துக்கு ஆதியிலிருந்தே … Read more

கடவுளைக் காண வேண்டுமா, இதோ…

நான் கிறித்தவம் பற்றி அடிக்கடி வெறுப்போடு எழுதுவதாக சில நண்பர்கள் கடிதம் எழுதுவதுண்டு.  நான் மதமாற்றக் கிறித்தவத்துக்கு மட்டுமே எதிர்.  எந்த மதத்திலிருந்தும் எந்த மதத்துக்கும் மாறுவது எனக்கு உடன்பாடானதல்ல.  அது கூட என் தனிப்பட்ட கருத்துதான்.  மதமாற்றம் என்பது சொந்த விருப்பத்தில் அமையாமல் தூண்டுதலின் காரணமாக அமைந்து விடுகிறது என்பதே காரணம்.  மற்றபடி நான் யேசு கிறிஸ்துவின் அடிப்படைகளுக்கும் கிறித்தவத்தின் ஆன்மீகத்துக்கும் எப்போதுமே விசுவாசியாக இருப்பவன்.  மேலே உள்ள இணைப்புகளில் மூன்றாவதாக உள்ளதை முழுமையாகக் கேளுங்கள்.  … Read more

அல்லாஹு அக்பர்…

இந்தப் பாடலை ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நண்பர் சொன்னார், ”கடைசியில் கேட்பதை நிறுத்தி விட்டேன். இன்னொரு முறை கேட்டால் முஸ்லீமாக மாறி விடுவேன்.” என்ன ஆச்சரியம் என்றால், இன்னொரு நண்பருக்கும் அனுப்பினேன். அவரும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.

ஒரு பதில்…

டியர் சாரு நீங்க  கம்னாட்டி  ஜெயமோகன் என எழுதியதைபார்த்து  ஏன் இப்படி எழுத வந்தது என வியப்புவேதனை  சரியில்லை இதைப்போல எழுதுவதுஎன  தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன் ஆரா என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான … Read more

முந்நூறுக்குள் ஒரு கதை

67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது.  அதாவது, சென்ற ஆண்டு வரை.  சத்தியம்.  இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது.  ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி.  எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அது வேறு ஏரியா.  இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா.  அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள்.  ஆனால் பெருந்தேவி … Read more