ரகசியம்

இதுவரை யாரிடமும் சொல்லாத
ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் என்றேன்

வேண்டாம் என்றாள்

அதன் பிறகு அவளுக்கான கதவை மூடி விட்டேன்

போயும் போயும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதவளிடம்

சொற்களைப் பகிர்ந்து என்ன பயன்?