3. எப்போதாவது எழுதுபவனின் கவிதை

”எழுதாதவன் எழுதியிருக்கும்

கவிதை எப்படியிருந்ததென்று சொல்”

என்றேன்.

”நட்சத்திரங்களின் காலம்

கற்பனையில் எட்டாதது

புழுக்களின் காலம்

கண் சிமிட்டலில் முடிந்து போகும்

கண் சிமிட்டும் காலத்தில்

நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய்

ஒரு

அதிசயத்தை

எப்படியென்று

யாரால் விளக்க முடியும் அன்பே?”

என்கிறாய்.